search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவஞ்சலி"

    • வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் வனம் அறக்கட்டளையில் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் நடைபெற்ற வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வனம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மற்றும் சுப்பிரமணியம், பொருளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனிதா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
    • அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தாராபுரம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தாராபுரம் தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,ஒன்றிய குழு தலைவர் செந்தில் குமார் , மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குகன் , நகர அவைத்தலைவர் கதிரவன், கவுன்சிலர் கண்ணன், வின்னர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாவதி பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பேரூர் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட் டுதலின் படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் பாரதி நகர் பேருந்து நிலை–யத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பி–ரமணி, ஒன்றிய பொருளா–ளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரே–சன், பொதுக்குழு உறுப்பி–னர் தண்டபானி, மாவட்ட தொண்டரணி அமைப்பா–ளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகத்சிங் சேதுபதி,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அசாரு–தீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி. கார்மேகம், முருகபூபதி, இளைஞரணி யூசுப், வினோத், பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கெளதம், பிரசாத், அசாரு–தீன், கிளை செயலாளர்கள் பூசைத்துரை, செல்வம், ஆனந்த், சோமசுந்தரம், மோகன், விசுவநாதன், நாக–லிங்கம் மேலும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வீர வணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது
    • பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-ம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், வீர சைவ பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமை வகித்தார். பார்க்கவ குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம் மாலை அணிவித்தார். யாதவ எழுச்சி பேரவை எம் சி கே சின்னத்தம்பி, யாதவ் வீர சைவ பேரவை மாவட்ட தலைவர் நாராயணன், வீரசைவ பேரவை மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன், நாயுடு சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் சதாசிவம், அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க பிரதிநிதிகள் சதாசிவம் பிள்ளை ,கீரனூர் சக்திவேல் ,தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் கே ஆர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . முன்னாள் ராணுவ வீரர் பாலையன் அனைவரையும் வரவேற்றார். நமது மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன் நன்றி கூறினார். பார்க்கவ குல உடையார் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், நாயுடு சங்க மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ் நாயுடு ,ராகவன் நாயுடு ,வீரசைவ பேரவை தியாகராஜன், கொப்பனாப்பட்டி கண்ணன், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் செல்ல விக்னேஷ், செல்வகுமார், பிரவீன், விமல், ஹரி ராமு ,புகழ், சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.

    அவருக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அவரின் ஆன்மா சாந்தியடைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து டிஜஜி விஜயகுமார் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விஜயகுமார் திரு உருவ படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செய லாளர் வி.கே.ஐயர், மாநில துணைப்பொதுச்செய லாளர்கள், சுப்பிரமணியன், தேனி பாலசுந்தரராஜ், நெல்லை சிவக்குமார், கிருபைராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    மாவட்ட துணை செய லாளர் மருதன்வாழ்வு ரவி, மாவட்ட துணை செயலாளர் ஆழ்வை பொன் அமிர்தம், குருவை சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் மாபெரும் இயக்கமாக நமது புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமநீதிக்காக போராடி உயிர் நீத்த சமநீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-வது வீர வணக்க புகழஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்தாண்டிற்கான வீரவணக்க புகழஞ்சலி, வீரவணக்க பேரணி நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    வீரவணக்க புகழஞ்சலி நிகழ்விற்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50 வாகனம் என குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முக நாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    ×