search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
    X
    மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்திய காட்சி.

    தாராபுரத்தில் அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

    • அனிதா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
    • அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தாராபுரம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தாராபுரம் தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,ஒன்றிய குழு தலைவர் செந்தில் குமார் , மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் குகன் , நகர அவைத்தலைவர் கதிரவன், கவுன்சிலர் கண்ணன், வின்னர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாவதி பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பேரூர் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×