search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேடும் பணி தீவிரம்"

    • தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது.
    • அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் எஸ்.பி.எம் காலனியை சேர்ந்தவர் குமரேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெகதீசன் (வயது 17).தனியார் பள்ளியில் பிளஸ் 1 முடித்திருந்தார்.

    இவர் கடந்த, 1-ம் தேதி மதியம் கூட்டூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்பகுதியில் தென் பெண்ணை ஆறு, பாறைகளின் மீது அருவி போல் செல்கிறது. மாணவர் ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு குளித்தபோது, ஜெகதீசன் நீரில் மூழ்கினார்.

    சூளகிரி போலீசார், தீயணைப்புத் துறையினர் மாணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்கள் போராடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன உபகரணங்களுடன் மாணவரை 7 -வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    • சுமார் 500 அடி ஆழம் உள்ளது

    வேலூர்:

    வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர்.

    சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன.

    இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது. நேற்று மாலை அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை முதல் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.

    கல்குவாரிகுட்டை சுமார் 500 அடி ஆழம் உள்ளது. மேலும் தண்ணீருக்கு அடியில் முள் புதர்கள் உள்ளன. அதில் சின்னத்தம்பி சிக்கி இருக்கலாம். தொடர்ந்து 3-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது.

    • பொங்கலூர் ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் சஞ்சய் குளித்து கொண்டிருந்தார்.
    • தொடர்ந்து வாய்க்கால் முழுவதும் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

    பல்லடம் :

    திருப்பூர் நல்லூரை சேர்ந்த சங்கீதா என்பவரது மகன் சஞ்சய் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் 5 பேருடன் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் சஞ்சய் குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சஞ்சயை தண்ணீர் இழுத்துச் சென்றது. உடன் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து அவரது தாய் மற்றும் அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து வாய்க்கால் முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இரவு நேரம் என்பதால் தேடும் பணி தடைப்பட்டது. இந்த நிலையில் நேற்று போலீசார் காங்கேயம்,வெள்ளகோயில் ஆகிய பகுதிகளிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சஞ்சய் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தேடுதல் பணியை தீவிர படுத்த வேண்டும் என்று கோரி திருப்பூர்- தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவரது தாய், தனது மகனை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு அழுதபடி கூறினார். அவரை சமாதானம் செய்த போலீசார் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆகவே சாலை மறியலை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டனர்.

    சமாதானம் அடைந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வாய்க்கால் முழுவதும் தேடுதல் பணி நடைபெற்று வந்தது. ஆனால் மாணவனின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று இரவு 10 மணி வரை தேடி வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அடர்ந்த இருட்டு காரணமாக உடலை தேடுவதை இரவு நிறுத்தினர். மீண்டும் இன்று காலை 10 மணி முதல் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார்.
    • ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30) ,லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.

    சிறுவன் மாயம்

    இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்த மானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாய மானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீ சில் புகார் செய்தனர்.

    தேடுதல் வேட்டை

    இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்து குமரன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    போலீசார் விசாரணை

    நேற்று முன்தினம் முதல் இன்று வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான் , யாராவது அவனை கடத்தி சென்றா ர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    பி.ஏ.பி. வாய்க்கால்

    இதனிடையே ரிதன் விளையாடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இதனால் ரிதன் அங்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.

    வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.    

    • இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்,

    மதுரை மாவட்டம் அவ னியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் கவுந்தரபாண்டி யன். இவரது மகன் பாலா (35). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பாலா நேற்று மாலை பவானிசாக ரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவி லை அடுத்த பாலம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அந்த வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்ற பாலா எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க்காலில் இறங்கி பாலாவை தேடினர். இரவு நீண்ட நேரமாகியும் அவரை கண்டு பிடிக்க வில்லை. அவர் என்ன ஆனார் என தெரிவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் வாலிபர் உடல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் 4 வது நாளாக தேடி வருகின்றனர்.
    • எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் என வாலிபரின் தந்தை கூறினார்.

    செம்பட்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய்பாண்டியன் (28) இவர், திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு பகுதியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.

    ராமநாதபுரம், சத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் கல்யாணசுந்தரம் (25) நண்பன் அஜய்பாண்டியனை பார்க்க கடந்த 31-ம் தேதி மங்களம்கொம்புக்கு வந்துள்ளார். ஆடி 18-டை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கினார்.

    அதனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கினார். திடீரென, பாறையில் வலுக்கி விழுந்து தண்ணீர் இழுத்து சென்றது. உடனடியாக தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆத்தூர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் வாலிபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தீயணைப்பு படை வீரர்களின் குழுக்கள், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் இருந்து ஆத்தூர் காமராஜர் அணை அருகே கன்னிமார் கோவில் வரை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் அணை தண்ணீர் வரும் கன்னிமார் கோவில் பகுதியில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கொட்டும் மழையில் தேடி வருகின்றனர்.

    ஆனால் நேற்று வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாலிபரின் பெற்றோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

    அருவியில் தவறி விழுந்த வாலிபரின் தந்தையான நாகநாதசேதுபதி கூறுகையில், எங்களுக்கு அஜய்பாண்டியன், அருள்பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதில் அஜய்பாண்டியன் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு திரும்பினார். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மங்களம்கொம்பு பகுதியில் 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்தார்.

    இன்று 4-வது நாளாக தீயணைப்புத்துறையினர் அஜய்பாண்டியனை தேடி வருகின்றனர். எங்கள் மகன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் புல்லாவெளி பகுதியில் தங்கியுள்ளோம். மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு உதவி செய்து ஆறுதல் கூறினர். இடைவிடாமல் பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

    எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் கூறினார்.

    ×