search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pullaveli falls"

    • கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டுகளித்தபோதும் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதியில் ஓய்வெடுக்க ஆர்வம்காட்டுகின்றனர்.

    இதனால் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக ெகாடைக்கானலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆப்பரித்து கொட்டுகிறது. மேலும் புதிய அருவிகளும் உருவாகி உள்ளன.

    கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மலைகளுக்கு இடையே வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதில் சிலர் மதுஅருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

    இதனைதொடர்ந்து வனத்துறை சார்பில் ஆபத்தான பகுதி எனவே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவதானப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டி கொடுத்த வாலிபரை கடத்திச்சென்று புல்லாவெளியில் கொன்று வீசினர்.

    இதனைதொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் ஆபத்தான முறையில் இருந்த பாலத்தையும் வேலி கட்டி சுற்றுலா பயணிகள் செல்லமுடியாதவாறு தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அவ்வப்போது அருவியில் ரோந்து சென்று தகாத செயல்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணித்து வருகின்றனர். இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    விடுமுறையை கொண்டாட மலைப்பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடக்கூடாது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளோம். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆபத்தான புல்லாவெளி அருவி உள்ளது.
    • வனத்துறை கட்டுப்பாட்டையும் மீறி புல்லாவெளி அருவிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆபத்தான புல்லாவெளி அருவி உள்ளது. இந்த அருவியில் 500 அடி பள்ளத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காட்சியை பார்க்க திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    குறிப்பாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் புல்லாவெளி அருவியில் நீராடிச்செல்வதையும், வழக்கமாக வைத்திருந்தனர். ஆபத்தான இந்த அருவியை காண வரும் இளைஞர்கள் மிக அருகில் சென்று செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து விடுகின்றனர்.

    இது வரை இந்த அருவியில் சுமார் 15 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புல்லாவெளி அருவியில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரமக்குடியைச் சேர்ந்த வாலிபர் அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து புல்லாவெளி அருவிக்கு செல்ல தடை என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. தற்போது அருவியில் சற்று பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அவற்றை சரி செய்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மழை நின்ற பிறகும் அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வருகின்றனர்.

    இங்குள்ள ஆபத்தான கயிறு பாலத்தில் நடந்து செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டையும் மீறி புல்லாவெளி அருவிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் வாலிபர் உடல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் 4 வது நாளாக தேடி வருகின்றனர்.
    • எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் என வாலிபரின் தந்தை கூறினார்.

    செம்பட்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய்பாண்டியன் (28) இவர், திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு பகுதியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.

    ராமநாதபுரம், சத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் கல்யாணசுந்தரம் (25) நண்பன் அஜய்பாண்டியனை பார்க்க கடந்த 31-ம் தேதி மங்களம்கொம்புக்கு வந்துள்ளார். ஆடி 18-டை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கினார்.

    அதனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கினார். திடீரென, பாறையில் வலுக்கி விழுந்து தண்ணீர் இழுத்து சென்றது. உடனடியாக தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆத்தூர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் வாலிபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தீயணைப்பு படை வீரர்களின் குழுக்கள், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் இருந்து ஆத்தூர் காமராஜர் அணை அருகே கன்னிமார் கோவில் வரை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் பெய்யும் மழைத் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருவதால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வரக்கூடும் என்ற கோணத்தில் அணை தண்ணீர் வரும் கன்னிமார் கோவில் பகுதியில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கொட்டும் மழையில் தேடி வருகின்றனர்.

    ஆனால் நேற்று வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாலிபரின் பெற்றோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

    அருவியில் தவறி விழுந்த வாலிபரின் தந்தையான நாகநாதசேதுபதி கூறுகையில், எங்களுக்கு அஜய்பாண்டியன், அருள்பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதில் அஜய்பாண்டியன் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு திரும்பினார். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மங்களம்கொம்பு பகுதியில் 3 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்தார்.

    இன்று 4-வது நாளாக தீயணைப்புத்துறையினர் அஜய்பாண்டியனை தேடி வருகின்றனர். எங்கள் மகன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் புல்லாவெளி பகுதியில் தங்கியுள்ளோம். மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு உதவி செய்து ஆறுதல் கூறினர். இடைவிடாமல் பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

    எங்கள் மகன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு என கண்ணீருடன் கூறினார்.

    ×