என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபிகா படுகோனே"
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்
- "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார்.
- தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஜவான் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.
மும்பை:
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார்.
'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, இசை அமைப்பாளர் அனிருத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த அனிருத், ஷாருக்கானை நடனமாட வரும்படி அழைத்தார். அவருடன் தீபிகா படுகோனேவும் வந்தார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடி சலியா பாடலுக்கு அசத்தலாக நடனமாடியது. இதைக் கண்ட ரசிகர்கள் இந்த நடனத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
- நடிகர் பிரபாஸ் தற்போது 'கல்கி 2898- ஏடி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தீபிகா சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தீபிகா படுகோனே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். மிகவும் அழகான பெண் மற்றும் உலகம் முழுவதும் ஏற்கெனவே மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் அவருடன் பணியாற்ற விரும்பினேன். இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.
- பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங்.
- இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங் தம்பதியிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதையடுத்து இருவரும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அதில், இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால் தீபிகா, ரன்வீரின் கையை பிடிக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் முகத்தையும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதனால் கோபமான ரன்வீர் சிங் முன்னால் வேகமாக நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினையா..? இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்களா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
- உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர்.
அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் இந்த விழாவில் பலரது கண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் வந்து கலந்து கொண்டார். அவர்தான் எந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கப்போகிறது என்பதை அறிவிப்பும் செய்தார்.
இந்த நிலையில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர். இதை மறுநாள் வெளியிட்ட புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனேவை மறந்து அவரை பிரேசிலிய அழகி கமிலா ஆசல்வ்ஸ் என்று குறிப்பிட்டனர். இதைப்பார்த்துப் பிரபலமான வோக் பத்திரிகையும் தீபிகாவின் பெயரை மாற்றி வெளியிட்டது. இது மறுநாள் ஆஸ்கர் கொண்டாட்டங்களில் எதிரொலித்தது என்கிறார்கள்.
- 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
- இதில், நடிகை தீபிகா படுகோனே தொகுப்பாளராக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக நடிகை தீபிகாபடுகோனே பங்கேற்றார். சிவப்பு கம்பளம் போர்த்திய விழா மேடையில் தீபிகா படுகோனே கருப்பு கவுன் அணிந்து பங்கேற்றார்.
37 வயதான அவர் தனது விருப்ப உடையான லூயிஸ் உய்ட்டன் ஆப் தி ஷோல்டர் மெர்மெய்ட் பிளாக் கவுனில் அழகு தேவதையாக ஜொலித்தார். அவர் கழுத்தில் 82oE என்ற பச்சை (டாட்டூ) குத்தியிருந்தார். தீபிகாவின் மேக்கிங் அவரை ஹாலிவுட் நடிகை போல கிளாமராக காட்டியது. அவர் அணிந்திருந்த பிரைஸ்லெட்டுடன் கூடிய நெக்லஸ் அனைவரின் பார்வையையும் அவரது பக்கம் திருப்பியது.
பின்னர் ஆஸ்கர் மேடை ஏறிய அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தையும், அதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார். முக்கியமாக பாடலின் நடன அசைவுகள், பாடலுக்கு யூ டியூப்பில் வந்த வியூவ்ஸ், ரீல்சில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அவர் பேச்சு முழுவதும் இடை இடையே சிரித்தார்.
தீபிகாபடுகோனே ஆர்.ஆர்.ஆர். படம் பற்றி பேசிய போது ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அவரை பேசவிடாமல் திக்குமுக்காட செய்தனர். அதன் பிறகு நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது. தீபிகாபடுகோனேக்கு முன்பு மாடல் நடிகை பெர்சிஸ் கம்பட்டா மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஆஸ்கரில் பங்கேற்றுள்ளனர். தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்கர் விழாவில் தான் அணிந்திருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ‘பதான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.
தீபிகா படுகோனே
சமீபத்தில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த "பதான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12- ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
ஆஸ்கர் தொகுப்பாளர் பட்டியல்
இதில் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பதான்'.
- இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் பதான் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.
இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
- ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பதான்.
- ‘பதான்’ தேச பக்தி படம் என பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ வெளியாகி இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடந்தது. பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா வற்புறுத்தி உள்ளார். படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதான் படம் திரையிடப்படும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று அயோத்தி அனுமன் காரி அமைப்பு எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்" என்றார்.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பதான்'.
- இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ''தீபிகா படுகோனே காவி உடை அணிந்துள்ளார். அசுத்தமான மனநிலையில் படமாக்கி உள்ளனர். பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளையும் நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும்" என்றார். இதனால் படத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்