search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபதி அம்மன் கோவில்"

    • கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
    • பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

    காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • தீமிதி விழா நன்கொடை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியைச்சேர்ந்த வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி மகாபாரத சொற்பொழிவுடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

    இதைமுன்னிட்டு தினமும் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் தீமிதி விழாவிற்கு நன்கொடை வழங்கினார்.

    அவருக்கு கோவில் விழாக்குழு சார்பில் நாட்டாமை சரவணன் சால்வை அணிவித்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.

    இதில் படவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் அன்பழகன், பால்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, கிளைக் கழக செயலாளர்கள் பொன்பன்னீர், ராமலிங்கம், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி.
    • மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சினைக்குள்ளான திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந்தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தினார்.

    இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

    அப்போது வருகிற 31-ந்தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    அதன் பிறகும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் மதமாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்தனர்.

    இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 1-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 4-ந் தேதி கரகம் நிகழ்ச்சியும், 7-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.

    8 -ந் தேதி திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

    பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் காவடிக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்களுடன் திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 7.25 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட 188 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.
    • பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே 'கோவிந்தா' கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சிவகிரி:

    சிவகிரியில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.

    சப்பரத்தில் எழுந்தருளி

    மாலை 5.30 மணிக்கு கோவிலில் இருந்து திரவுபதி அம்மன், கிருஷ்ணன், அர்ச்சுனர் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு எழுந்தருளி சப்பரத்தில் அமர்ந்து புறப்பட்டு சென்றனர். பூக்குழி இறங்குவதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து வந்த பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சப்பரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, முக்கிய ரத வீதிகள், சிவராமலிங்காபுரம் தெரு வழியாக வலம் வந்தனர். சப்பரம் 6.15 மணிக்கு கோவிலுக்கு முன்பாக சென்றவுடன் கோவில் பூசாரி மாரிமுத்து முதன்முதலாக பூக்குழி இறங்கினார். இதனைத் தொடர்ந்து 150 பெண்கள் உட்பட 736 பேர் பூக்குழி இறங்கினர்.

    கலந்து கொண்டவர்கள்

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கண்ணதாசன், நிர்வாக அதிகாரி கேசவராஜன், கணக்கர் குமார், காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பூக்குழித் திருவிழாவைக் காண சிவகிரி, புளியங்குடி, தளவாய்புரம், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம், ராயகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

    முன்னதாக புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு துறையினரும், சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்த ரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், கணேசன், தலையாரிகள் வேல்முருகன், அழகுராஜா, வனத்துறையினர் மற்றும் பலர் பூக்குழித் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • தர்மர் பிறப்பு, திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழபெரம்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அல்லி திருமணம், தர்மர் பிறப்பு , திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான படுகள நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • பெண்கள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்களை பாடினர்.

    சிவகிரி:

    சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் வருகிற 4 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1-ம் திருநாள் நடைபெற்றது. 2-ம் திருநாளான நேற்று இரவு 7 மணியளவில் திரவுபதி அம்மன் கோவிலில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 401 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சீதாராமன், பொருளாளர் சிதம்பரம் குருசாமி, துணைத்தலைவர் குமார், துணைச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதோஷ வழிபாட்டு குழுவை சேர்ந்த தலைவி சரஸ்வதி தலைமையில், தேவி, குழந்தை நாச்சியார், மீனா ஆகியோர் பக்தி பஜனை பாடல்கள் பாட திருவிளக்கு ஏற்றி பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை ஒன்று சேர்ந்து பாடி 401 திருவிளக்கு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவிழா நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • ரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டலபூஜை உபயதாரர்கள் சார்பில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ரந்தினி டத்தோ. எஸ்.பிரகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 108 பெண்கள் குத்து விளக்குடன் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த திருவிளக்கு பூஜையில் பூலாம்பாடியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×