search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு 108 பூஜை
    X

    பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு 108 பூஜை

    • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • ரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டலபூஜை உபயதாரர்கள் சார்பில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ரந்தினி டத்தோ. எஸ்.பிரகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 108 பெண்கள் குத்து விளக்குடன் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த திருவிளக்கு பூஜையில் பூலாம்பாடியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×