search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupathi Amman Temple"

    • கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
    • பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

    காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

    அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • தீமிதி விழா நன்கொடை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியைச்சேர்ந்த வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 18-ந்தேதி மகாபாரத சொற்பொழிவுடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

    இதைமுன்னிட்டு தினமும் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும் நடக்கிறது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் தீமிதி விழாவிற்கு நன்கொடை வழங்கினார்.

    அவருக்கு கோவில் விழாக்குழு சார்பில் நாட்டாமை சரவணன் சால்வை அணிவித்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.

    இதில் படவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் அன்பழகன், பால்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர், முன்னாள் கவுன்சிலர் ரகு, கிளைக் கழக செயலாளர்கள் பொன்பன்னீர், ராமலிங்கம், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    அதனை முன்னிட்டு அங்குள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெறுகிறது. முன்னதாக  தேரோட்டம் நடைபெறுகிறது.

    மறு நாள் ஜூன் 3-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    ×