search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
    X

    தேரோட்டம் நடைபெற்ற காட்சி.

    மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

    • வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    அதனை முன்னிட்டு அங்குள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெறுகிறது. முன்னதாக தேரோட்டம் நடைபெறுகிறது.

    மறு நாள் ஜூன் 3-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    Next Story
    ×