search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன் ஆதரவாளர்கள்"

    சென்னையில் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் ஆதரவாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. நிர்வாகி வைத்த பேனர் கிழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சாலிகிராமத்தில் தினகரன் ஆதரவாளர் காருக்கு தீ வைக்கப்பட்டது.

    இந்த விவகாரம் காரணமாக இருதரப்பினரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதும் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினர் மீதும் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் தினகரன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி மாணவர் அணி செயலாளர் அம்மன் கோவில் ராஜா, பரணி இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    பேனர் வைக்கும் தகராறில் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK
    போரூர்:

    விருகம்பாக்கம், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையை சேர்ந்தவர் குணசீலன். டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கேபிள் டி.வி.யும் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவர் தனது காரை சாலிகிராமம், தசரதபுரம் 2-வது தெரிவில் உள்ள கேபிள் டி.வி. அலுவலகம் எதிரே நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் அதிகாலை வந்த மர்ம கும்பல் கார் கண்ணாடியை உடைத்து தீ வைத்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை குணசீலன் ஆதரவாளர்கள் கிழித்த தகராறில் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை இரு தரப்பினரையும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.- அ.ம.மு.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு இருந்தனர்.

    திடீரென அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்டதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி குட்டி என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தினகரன் ஆதரவாளர்களான முரளி, குணசீலன், சரவணன், கார்த்திக் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி அன்பரசன் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி தினகரன் ஆதரவாளர்கள் குணசீலன், அம்மன் கோவில் ராஜா, பரணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதே போல் தினகரன் ஆதரவாளர் துரைமுருகனும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கூட்டுசதி, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். #ADMK
    ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #dinakaran #spvelumani

    கோவை:

    தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்தில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் திரட்டி வந்துள்ளார். தினகரன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் குறிப்பிட்ட கும்பல் சென்று வருகிறது. ஒரே முகங்களைத்தான் இந்த கூட்டங்களில் காண முடிகிறது. கோவையில் கூட்டத்தை கூட்டி வந்து பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

    ஜெயலலிதாவினால் 10 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன். வீட்டு பக்கமோ, நாடாளுமன்றத்துக்கோ செல்லக்கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்தான் இவர். இப்போது நான்தான் தலைவர் என்று கூறி வரும் அவருடன் சிலர் சென்று வருகிறார்கள். மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள்.

    நாங்கள் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது கஷ்டப்பட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உள்ளனர். சிறைக்கும் சென்றுள்ளனர். பாடுபட்டு கட்சியை பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். இதில் டி.டி.வி. தினகரனின் பங்கு என்ன?. ஜெயலலிதா இருக்கும்வரை அவரை பக்கத்திலேயே விடவில்லை. இப்போது நான்தான் வாரிசு என்கிறார். அது நடக்காது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு உள்ளனர். எனவே இப்போது கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதால் இப்போது பெய்த மழையில் ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுய விளம்பரத்துக்காக கூட்டங்கள் நடத்தி குறுகிய கும்பலை வைத்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரனின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.

    தனக்கு பிறகு இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எனவே இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எவராலும் அ.தி.மு.க.வை நெருங்கி பிடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #spvelumani

    தினகரன் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். யாரும் பிளவுபடுத்த முடியாது என்று பிரவு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran

    கள்ளக்குறிச்சி:

    தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் இருந்து வருகிறோம். தமிழக மக்களுக்காக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran 

    அரசு நெருக்கடியால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராது என கருதுவதாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #thangatamilselvan #edappadipalanisamy

    திண்டுக்கல்:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த சபாநாயகரின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. 3-வது நீதிபதி இவ்வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வராது. அரசு சொல்வதைதாத்தான் நீதிமன்றம் கேட்கும் நிலையில் உள்ளது.

    எனவே நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையால் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாட விரும்பவில்லை. என்னால் தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை. கடந்த 9 மாதமாக என் தொகுதி மக்களுக்காக எந்தவித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெறுவதன் மூலம் இடைத்தேர்தல் வரட்டும். அதில் நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து தொகுதி மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

    எனது இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களின் கருத்து என்ன என்பது எனக்கு தெரியாது.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் நான் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியில்தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்துரை (நிலக்கோட்டை தனி):-

    தங்கதமிழ்செல்வனின் முடிவு அவரது சொந்த விருப்பம். பதவி நீக்கம்தொடர்பாக 18 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுக்கள் அளித்து உள்ளோம். அதில் தங்கதமிழ்செல்வம் மட்டுமே வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார். மற்ற 17 பேரும் டி.டி.வி. தினகரன் சொல்படி நடந்து வருகிறோம்.

    வழக்கை வாபஸ் பெற்றாலும் அவரும் எங்கள் அணியில்தான் உள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் யாருக்கு இல்லை.

    அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் மீதான தீர்ப்பு விரைவில் வந்தது. ஆனால் எங்களது வழக்கு இத்தனை காலம் தாமதம் ஆகி உள்ளது. அதுவும் மாறுபட்ட தீர்ப்பாக அமைந்து உள்ளதால் 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பாவது நல்லதாக நடக்கும் என்று நம்புகிறோம்.

    கதிர்காமு(பெரியகுளம்):-

    நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் அணிக்கும், பெரியகுளம் தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமாக அமைந்து உள்ளது. நான் கடந்த பல ஆண்டுகளாக இதே தொகுதியில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறேன். சட்டமும் படித்து உள்ளேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்றாலும் தற்போது அளிக்கப்பட்டு உள்ளதீர்ப்பு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது.3-வது நீதிபதி நல்ல தீர்ப்பை வழங்குவார் என நம்புகிறோம். தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன். தங்கதமிழ்செல்வன் முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. #thangatamilselvan #edappadipalanisamy

    அ.தி.மு.க. மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இது குறித்த தகவல் கிடைத்ததும் வடவள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்பதால் வேறு பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தங்கள் கார்களில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வடவள்ளியில் வந்த போது அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.கவினர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களின் வாகனங்களை மறித்து கற்களை வீசினார்கள்.

    மேலும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனை தொடர்ந்து உடைக்கப்பட்ட வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி மற்றும் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 58 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி ஆகியோரும் ஆவார்கள்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைதான 58 பேரையும் போலீசார் கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 31-ந் தேதி வரை காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.

    அப்போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 58 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கான மனுவை தாக்கல் செய்யுங்கள் என மாஜிஸ்திரேட்டு கூறினார்.

    உடனே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு மாஜிஸ் திரேட்டு தள்ளி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கைதான 58 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த வடவள்ளி லிங்கனூர் மணி, தாமோதரன், ஜெரால்டு, மகேஷ் குமார் ஆகியோர் தாங்கள் வடவள்ளி குருசாமி நகரில் நின்று கொண்டு இருந்த போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை கழுத்தை பிடித்து நெரித்து கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக வடவள்ளி போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, பிரபு குமார், கருப்பசாமி, கணேஷ் குமார், குணசேகரன் ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    காயம் அடைந்த அ.தி.மு.க. வினர் 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.#tamilnews
    ×