என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2026"

    • 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை? உலக கோப்பையை யார் வெல்வது எந்த அணி என கணித்து முன்னாள் வீரர்கள் பதிவிட ஆரம்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து கணித்துள்ளார். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கணித்துள்ளார்.

    • புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும்.
    • பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.

    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதற்கிடையே டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்தியாவுடனான போட்டியை எதற்காக புறக்கணிக்கிறோம் என்ற காரணத்தை பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.

    இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. பி.சி.பி.யின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஐ.சி.சி. இன்னும் காத்திருக்கிறது.

    பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புறக்கணிப்பு முடிவை எடுத்தால் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்கும். பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் செல்வதற்கு தடை, வருவாய் பகிர்வு நிறுத்தம், பி.எஸ்.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுப்பு, அபராதம் என பல்வேறு வகையில் நடவடிக்கைகளை ஐ.சி.சி. எடுக்கும்.

    இந்தியாவுடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

    திட்டமிடப்பட்ட நாளில் (15-ந்தேதி) இந்திய அணி கொழும்பு மைதானத்துக்கு சென்று விடும். டாஸ் போடும் நிகழ்வில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக தகுதி நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை வழங்குவார்கள். பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றிலும் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை புறப்பட்டு சென்றது.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
    • இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.

    அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.

    ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை 'வெட்டு' விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.

    ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.

    அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    • டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என்று அணிக்கு உத்தரவிட்டுள்ளது.


    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என்று அணிக்கு உத்தரவிட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேச அணி, தங்களின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்ததால், வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஐசிசியின் இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டிக்கும் விதமாகவே பாகிஸ்தான் இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவு குறித்துப் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.

    அவர் தனது பதிவில், இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அப்படி ஒரு சூழல் அமைந்தால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் பாகிஸ்தான் புறக்கணிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பீட்டர்சனின் இந்தக் கேள்வி, பாகிஸ்தானின் முடிவில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதோடு, கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    லாகூர்:

    இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

    வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது.

    அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இந்த புறக்கணிப்பு முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சல்மான் அலி அகாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம், நிச்சயமாக நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் இது எங்கள் முடிவு அல்ல. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

    அரசு மற்றும் பிசிபி தலைவர் என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்பிறகே செல்வோம், அதைச் செய்வோம்," என்று தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
    • கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி அறிவித்தது.
    • பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது.

    2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் அறிவுறுத்தலின் பேரில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா - –பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. இருப்பினும், தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது.

    இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நேர்மை, போட்டித் தன்மையை பாதிக்கும் என்றும், நீண்டகாலத்தில் விளையாட்டிற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். இந்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (PCB) இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை," என்று தெரிவித்துள்ளது.

    மேலும், "2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலை ஐசிசி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது."

    "ஐசிசி போட்டிகள் நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, இந்த போட்டிகளின் புனிதத்தையும் பாதிக்கிறது. தேசிய கொள்கை விவகாரங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதிக்கிறது. ஆனால், இந்த முடிவு உலக கிரிக்கெட்டுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் நலனுக்கும், பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சாதகமானதல்ல."

    "இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது. 2026 டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசியின் முதன்மை இலக்கு. அதற்காக, PCB உட்பட அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில், பரஸ்பர தீர்வை PCB ஆராய வேண்டும்," என ஐசிசி தெரிவித்துள்ளது.

    இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் 'A' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை இணைந்து (co-host) நடத்துகிறது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

    பாகிஸ்தான், பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவையும், பிப்ரவரி 18ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், இரண்டு புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும். மேலும், ஐசிசி விளையாட்டு விதிகளின்படி, அந்த போட்டி 'forfeit' ஆக அறிவிக்கப்பட்டால், பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டும் பாதிக்கப்படும்.

    • டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது.
    • வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

    இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

    வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

    இந்நிலையில் வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால் ஐஸ்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    • இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்ட விவரங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் வருகிற 4-ந்தேதி மோதுகிறது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.படேல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    பாகிஸ்தான் அணி இதே தேதியில் அயர்லாந்தை கொழும்பில் சந்திக்கிறது. ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்துடனும், நியூசிலாந்து அணி அமெரிக்காவுடனும் (5-ந்தேதி) மோதுகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் 4 பயிற்சி ஆட்டம் நடக்கிறது. பிப்ரவரி 2-ந் தேதி கனடா-இத்தாலி அணிகளும் (இரவு 7 மணி), 3-ந் தேதி நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (மாலை 5 மணி), 5-ந்தேதி கனடா-நேபாளம் (பிற்பகல் 3 மணி) 6-ந்தேதி இத்தாலி-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பிற்பகல் 3 மணி) அணிகளும் மோதுகின்றன.

    • வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கராச்சி:

    இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் நிலைப்பாடுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. கெடு விதித்து இருந்தது.
    • மறுக்கும் பட்சத்தில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்று ஐசிசி எச்சரித்தது.

    டாக்கா:

    இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது.

    இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.சி.சி.யின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா? என்று கேப்டன் லிட்டன் தாசிடம் கேட்கப்பட்டது. சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பது தனக்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக லிட்டன்தாஸ் கூறியதாவது:-

    நாங்கள் உலகக்கோப்பையில் விளையாட போகிறோமா என்பது உங்களுக்கு (நிருபர்கள்) உறுதியாக தெரியுமா. என் தரப்பில் உறுதியாக தெரியவில்லை. அனைவருக்கும் நிச்சயமற்ற நிலைதான். இந்த சமயத்தில் முழு வங்கதேசமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    நீங்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. அது எனக்கு பாதுகாப்பானது அல்ல. பதில் இல்லை.

    இவ்வாறு லிட்டன்தாஸ் கூறியுள்ளார்.

    இதற்கிடையே வங்கதேசத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

    • அடுத்த மாதம் 7-ந் தேதி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.
    • தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது.

    டாக்கா:

    அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா செல்லமாட்டோம் என்று அறிவித்து இருக்கும் வங்காளதேசம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.

    இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் இன்றுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்துக்கு கெடு விதித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்கதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் அணியை சேர்க்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் வங்கதேசம் அடிபணியாது' என்றார்.

    ×