என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஞானவேல்"
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் "வேட்டையன்" படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது.
அந்த வகையில், இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினி ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 'வேட்டையன்' படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.
- ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
- பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை – அனிருத். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொங்கலை அன்றுபுதிய போஸ்டரை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.
இதனையடுத்து வேட்டையன் ஸ்பெஷல் போஸ்டரை ரசிகர்கள் ஆவர்வத்துடன் பார்ப்பதுடன் சமூக வளைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனவும் கேட்டு வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம், அடுத்த மாதம் ரிலீஸாகவிருப்பதால், விரைவில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டும் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்-நடிகைகள் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது.
நேற்று ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பு முடிந்த பின் கேரவன் செல்லும் போதும், மீண்டும் ஒட்டலுக்கு திரும்பும் போதும் ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்தபடி சென்றார். இன்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை லோகேஷ் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் 172-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 172-வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை வைத்து படம் இயக்கும் மாரி செல்வராஜ், ரஜினியின் படத்தை எப்படி இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தூத்துக்குடியில் ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுவதால் ரஜினி அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் ‘பருத்திவீரன்’.
- அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்திவீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. 'பருத்திவீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
'பருத்திவீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி என பலர் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பருத்திவீரன் தணிக்கை சான்றிதழ்
இந்நிலையில் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் படத்தின் தயாரிப்பாளர் பெயர் இடம்பெரும் இடத்தில் இயக்குனர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம்பெரும் இடத்தில் டீம் ஒர்க் புரொடக்ஷன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் தணிக்கை சான்றிதழில் ஞானவேல்ராஜாவின் பெயரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாததால், அமீர்தான் படத்தின் தயாரிப்பாளரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் இந்த புகைப்படத்திற்கு ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
- அமீரிடம் வருத்தம் தெரிவித்து ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
- இந்த அறிக்கையை விமர்சித்து சசிகுமார் பதிவிட்டிருந்தார்.
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சமுத்திரகனி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...
சமுத்திரகனி அறிக்கை
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்...அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!" காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு சசிகுமார், ஞானவேல் அறிக்கையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார்.
- இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்தின் மும்பை படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ், ரஜியின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் வலம் வருகிறது.
விஜய்யின் சில படங்களில் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
- இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.
இந்நிலையில், 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சூர்யா பதிவு
அதில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2023
திரைப்படம்… pic.twitter.com/kW25rvVgGM
- ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 'தலைவர் 170' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினி மற்றும் அமிதாப்பின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பை படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
When Superstar and Shahenshah met on the sets of #Thalaivar170 ?
— Lyca Productions (@LycaProductions) October 29, 2023
Reunion on screens after 33 years! ? #Thalaivar170 is gonna be double dose of legends! ? @rajinikanth @SrBachchan
Done with MUMBAI Schedule ??️✨@tjgnan @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/LfyV3rP2JI
- நடிகர் ரஜினிகாந்த்-இன் 170-வது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.
- இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 33 ஆண்டுகள் கழித்து தனது வழிகாட்டியுடன் நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், "33 ஆண்டுகளுக்கு பிறகு, எனது வழிகாட்டி ஸ்ரீ அமிதாப் பச்சனுடன், லைக்கா தயாரிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca's "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்