search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதம்"

    • வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை
    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

    தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் ௧௦௮ டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானது

    வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர் 102.2, திருப்பத்தூர் 106.88, திருச்சி 104.18, திருத்தணி 103.64, வேலூர் 106.7, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 8, 9-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 102 டிகிரி வெயில் பதிவானது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    ஈரோடு-106.16, பரமத்திவேலூர்-105.8. தர்மபுரி-103.64, திருச்சி-103.46. மதுரை விமான நிலையம்-103.1, திருப்பத்தூர்-102.92, மதுரை நகரம்-102.56, சேலம்-102.56, நாமக்கல்-102.2 வேலூர்-102.02, திருத்தணி-101.84, கோவை-101.12, சென்னை மீனம்பாக்கம்-101.76, தஞ்சாவூர்-10.04.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார்.
    • அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சர்ரே - கென்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

    அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் அதிரடியாக விளையாடினார். அவர் 44 பந்துகளில் 110 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சர்ரே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய கெண்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் சர்ரே அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார். சைமண்ட்ஸ் 2004-ல் அவர் குறைந்த பந்தில் சதம் அடித்தார்.

    இதற்கு முன்பாக ஷான் அபாட் அடித்த அதிகபட்ச டி20 ஸ்கோர் 41 ரன்கள்தான். அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.

    2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் சதம் விளாசியதுதான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.

    கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் ஆர்சிபி / புனே வாரியர்ஸ்- 2013

    ரிஷப் பண்ட் - 32 பந்துகளில் சதம் டெல்லி / இமாச்சல பிரதேசம்-2018

    விஹான் லுப்பே - 33 பந்துகளில் சதம் நார்த்வெஸ்ட் / லிம்போபோ- 2018

    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் - கெண்ட் / மிடில்செக்ஸ் - 2004

    சான் அபாட் - 34 பந்துகளில் சதம் - சர்ரே / கெண்ட்- 2023

    ஜேசன் ராய் காயம் காரணமாக ஷான் அபாட் கொஞ்சம் முன்னால் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
    • மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இதில், 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது சதம் அடித்த ஷூப்மான் கில் களத்தில் தனது பேட்டை முத்தமிட்டு கொண்டாடினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் அடித்த ஷூப்மான் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    விராட் கோலி, ஜோஸ் பட்லருக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மூன்று சதங்கள் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

    ×