என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "century"
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார்.
- இது சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதமாகும்.
தரம்சாலா:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.
இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் 12-வது சதமாகும்.
சுப்மன் கில்லும் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா
இந்நிலையில், இன்று சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதம் இதுவாகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும் ரோகித் சர்மா அடித்துள்ளார். இதன்மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை இவர் சமன் செய்தார்.
- டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார்.
- அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.
லண்டன்:
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சர்ரே - கென்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.
அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் அதிரடியாக விளையாடினார். அவர் 44 பந்துகளில் 110 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சர்ரே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய கெண்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் சர்ரே அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார். சைமண்ட்ஸ் 2004-ல் அவர் குறைந்த பந்தில் சதம் அடித்தார்.
இதற்கு முன்பாக ஷான் அபாட் அடித்த அதிகபட்ச டி20 ஸ்கோர் 41 ரன்கள்தான். அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.
2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் சதம் விளாசியதுதான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.
கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் ஆர்சிபி / புனே வாரியர்ஸ்- 2013
ரிஷப் பண்ட் - 32 பந்துகளில் சதம் டெல்லி / இமாச்சல பிரதேசம்-2018
விஹான் லுப்பே - 33 பந்துகளில் சதம் நார்த்வெஸ்ட் / லிம்போபோ- 2018
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் - கெண்ட் / மிடில்செக்ஸ் - 2004
சான் அபாட் - 34 பந்துகளில் சதம் - சர்ரே / கெண்ட்- 2023
ஜேசன் ராய் காயம் காரணமாக ஷான் அபாட் கொஞ்சம் முன்னால் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
இந்நிலையில், சந்திரன் சிகப்பு நிலாவாக ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை வரும் 27-ம் தேதி பின்னிரவு முதல் 28-ம் தேதி அதிகாலை வரை இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் காணலாம்.
27-ம் தேதி பின்னிரவு 11.54 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், 28-ம் தேதி அதிகாலை 1.52 மணியளவில் சந்திரனை முழு இருள் படர்ந்த சிகப்புநிற ரத்த நிலவாக தோன்ற வைக்கும். அதிகாலை 2.43 மணிவரை மொத்தம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த நிலை நீடிக்கும்.
பின்னர், மெல்ல விலக தொடங்கும் இந்த ஆண்டின் மிக நீளமான இந்த கிரகணம் அதிகாலை 3.49 மணிவரை சந்திரனின் ஒரு பகுதியை மறைத்திருக்கும்.
முழுக்கிரணத்தின் போது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர்களாக இருக்கும்.
இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தெற்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் உள்ள நாடுகளில் வாழும் மக்களும் இரவு முழுவதும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #LunarEclipse
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்