search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கலெக்டர் அலுவலகம்"

    • கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தவாறு மூதாட்டி ஒருவர் பரிதவிப்புடன் மனு கொடுக்க வந்தார். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்திருந்தார்.

    எனது பெயர் மாரியம்மாள் (வயது 80). கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். ஒரே மகன் செந்தில்குமார். கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.

    லாரி டிரைவரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டான். இதனால் நான் தனியாக வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை பார்த்தேன். அதற்குள் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றேன். ஆனால் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை நான் மாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறேன்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். அதை கேட்டு நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

    கணவர் மற்றும் மகனை இழந்து வாடும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை கொடுத்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அப்போது வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி சோர்வுடன் நடந்து வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் கோபாலகிருஷ்ணன் (வயது 35), கோவை இருகூர் ஏ.ஜிபுதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மில் தொழிலாளியான கோபாலகிருஷ்ணனுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன், சிங்காநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனு மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கோபாலகிருஷ்ணன் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

    அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சண்முகம் என்பவர், மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணனின் மனுவை முறையாக பெற்று விசாரிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.
    • அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளிப்பது வழக்கம்.

    இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகப்பட்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    விசாரணையில், அந்த வாலிபர் கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி. புதூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது40) என்பதும், அவர் வீட்டில் இருந்து பஸ் ஏறும் போது சாணி பவுடர் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோபாலகிருஷ்ணன் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    போலீசார் விரைந்து வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் என்னிடம் தகராறு செய்து வருகிறார். அவரது வீட்டில் 100 ரூபாய் திருட்டு போய் உள்ளது.

    அதனை நான் தான் எடுத்து விட்டதாக கூறி தகராறு செய்கிறார். மேலும் அடித்து உதைக்கிறார். இதனை தட்டி கேட்டபோது எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.

    எனக்கு யாரும் ஆதரவு இல்லை. எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என போலீசாரிடம் கூறினார்.அவரை சமரசம் செய்த போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    சக்தி சேனா இந்து மக்கள் இயக்க மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மரகதமணி மற்றும் நிர்வாகிகள் கையில் தீபம் ஏற்றி வந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.


    அவர்கள் கொடுத்த மனுவில் தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைகளை கூட சீரழிக்கிறார்கள்.இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி உள்ளனர்.

    ×