search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
    X

    கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

    கோவையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 65 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கோவை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் ஆன்லைன் பணியை புறக்கணித்தனர். பின்னர் கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 12 -வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் பிரஸ் நேவ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விளக்கி பேசினார். முற்றுகையில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர். 65 பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×