என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்
கோவை:
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
போலீசார் விரைந்து வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் என்னிடம் தகராறு செய்து வருகிறார். அவரது வீட்டில் 100 ரூபாய் திருட்டு போய் உள்ளது.
அதனை நான் தான் எடுத்து விட்டதாக கூறி தகராறு செய்கிறார். மேலும் அடித்து உதைக்கிறார். இதனை தட்டி கேட்டபோது எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
எனக்கு யாரும் ஆதரவு இல்லை. எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என போலீசாரிடம் கூறினார்.அவரை சமரசம் செய்த போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்க மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மரகதமணி மற்றும் நிர்வாகிகள் கையில் தீபம் ஏற்றி வந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைகளை கூட சீரழிக்கிறார்கள்.இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்