search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை
    X
    கலெக்டர் அலுவலகத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆண் குழந்தையை விட்டு சென்ற தம்பதி

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆண் குழந்தையை விட்டு சென்ற தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்படி தொட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணியளவில் இந்த தொட்டிலில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த அலுவலர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக தொட்டிலில் இருந்த குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தார்.

    டாக்டர்கள் குழந்தையை சோதனைசெய்த போது பிறந்து 20 நாட்களே ஆன ஆண்குழந்தை என்பதும், குழந்தை 1¾ கிலோ எடையில் காணப்பட்டது. எடை மிகவும் குறைவாக இருந்ததால் குழந்தை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதனையடுத்து டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற மர்மநபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு தம்பதி கையில் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதும், சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் கையில் குழந்தை இல்லாமல் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து குழந்தையை வீசி சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×