search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை குற்றவாளி"

    • வேராவை 3.5 மணி நேரம் கான்யுஸ் சித்திரவதை செய்துள்ளார்
    • ரஷிய ராணுவத்திற்கு இளைஞர்கள் அதிகளவு தேவைப்படுகிறார்கள்

    ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

    இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

    அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

    இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

    காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

    ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

    போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

    "நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

    "ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.

    • 2011-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு
    • 12 ஆண்டுகளாக பதுங்கி இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர்

    கோவை,

    கோவை பீளமேடு பாரதி காலனியில் சசிக்குமார் என்பவர் கெமிக்கல் கம்பெனி நடத்தி வந்தார்.

    அதே கம்பெனியில் கார் டிரைவராக சிங்காநல்லூர் அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்த விக்னேஷ்(வயது35) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த வெள்ளைச்சாமி(33), திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ்(31) ஆகியோர் கொள்ளையடித்தனர்.

    சொந்த ஊருக்கு சென்ற அந்த நிறுவன மேலாளர் சத்தியமூர்த்தி அதிகாலையில் திரும்பி வந்து விட்டார். கொள்ளையடிப்பதை பார்த்த அவர் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சத்தியமூர்த்தியை வெட்டி கொலை செய்து விட்டு, அவர் அணிருந்திருந்த மோதிரம் மற்றும் காரை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளைச்சாமி, ஜெயராஜ், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை நான்காவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த வெள்ளைச்சாமி அதன்பின்னர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். மற்ற 2 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
    • தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது (42 ). இவர் கடந்த 2008 -ம் ஆண்டு சென்னை கொலை குற்ற வழக்கில் ஈடுபட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தவர் 18/5/2011 முதல் 22/5/2011 வரை 5 நாள் பரோலில் வந்து அதிலிருந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுபடி செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் ஞானம்,மணி ஆகியோர்கள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று வெங்கடேசன் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர் மீது அவலூ ர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு ஆஜராகாமல் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து தேடப்பட்ட குற்றவாளியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×