search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு பொம்மைகள்"

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.
    • 3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோம நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    கடந்த 15-ந் தேதி முதல் நவராத்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் அம்மன் சன்னதி அருகே கண்ணைக்கவரும் வகையில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஆனந்தவல்லி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    தினமும் உற்சவ அம்ம னுக்கு பூஜைகள், தீபாரதனை கள் நடைபெற்று அதன்பின் துர்க்கை அம்மனுக்கு பூஜை கள் நடைபெற்று வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனையும் கொலு அலங்காரத்தையும் தரிசித்து செல்கின்றனர்.

    நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். தினமும் மாலையில் கோவில் மண்ட பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் வேதியே ரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் மகாபஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில்3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன்கோவில், செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

    • நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
    • மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.

    வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி அன்று அம்மன் சன்னதிகளிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் 9 படிகள் அமைத்து பல விதமாக சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலுவாகும். மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

    பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொலு பொம்மை கடைகளில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி கூறுகையில், கொலு பொம்மைகளை களிமண்ணாலும், காகிதகூழ் மூலமாகவும் தயாரித்து விற்பனை செய்கிறோம். சாய்பாபா, லட்சுமி, கிருஷ்ணர், ராமர், சரஸ்வதி, சீதை, விநாயகர் என 50-க்கும் மேற்பட்ட சாமி பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறினார்.

    • 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர்
    • திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர். கடவுள்களின் சிலைகள், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், புராண கதைகளை கண்முன் கொண்டு வரும் பொம்மைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பறவை, விலங்கினங்கள் என பல வகை பொம்மைகளை அலங்கரித்து வைப்பர். தற்போது அவற்றோடு சேர்ந்து மத சகிப்புத்தன்மையை போற்றும் வகையில் மும்மத கடவுள்களின் சிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வனங்களின் தோற்றம், வளம் நிறைந்த எதிர்காலம் நம் தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நிறுத்தி பொம்மை அலங்காரங்களை வைக்கின்றனர். நவராத்திரி தொடங்க உள்ளதையடுத்து பொதுமக்கள் விதவிதமான பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்.

    அதற்கேற்ப பொம்மை தயாரிப்பாளர்களும், மக்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு பொம்மைகளை அழகழகாக தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    விநாயகர் கேரம் போர்டு விளையாடுவது, தசாவதார தோற்றம், ராமர் பாலம், சுப நிகழ்ச்சிகளில் கீழே அமர்ந்து உணவருந்துவது, காவிரியாறு உருவான வரலாறு, விஸ்வகர்மா உள்ளிட்ட பொம்மைகள் உள்ளன.

    நவராத்திரிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள போதும், கொலு அலங்காரத்துக்கு பெண்கள் பொம்மைகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

    • வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்
    • களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது

    வேலுார்:

    நவராத்திரி பண்டிகை, வருகிற அக். 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வாக, கொலு வைக்கப்படும்.

    இதையொட்டி, வேலுார் கொசப்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. குறைந்தபட்சம் 3 அங்குலம் முதல் அதிகபட்சம் 4 அடி வரையிலான மண் பொம்மைகளை தயார் செய்து, அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து பொம்மை தயாரிப் பாளர்கள் கூறியதாவது:-

    நவராத்திரிக்கு பொம்மை தயாரிக்கும் பணியை ஆண்டுதோறும் டிசம்பர் மாதமே தொடங்கி விடுவோம்.

    களிமண் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொம்மைகளை, 3 மாதங்கள் நிழலில் உலரவைத்து, அதன் ஈரப்பதம் குறைந்தபிறகு சூளையில் வைத்து சுடப்படும்.

    பின்னர், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கும். ஒரு பொம்மையை முழுமையாக தயார் செய்ய 10 மாதகாலம் உழைப்பு தேவைப்படுகிறது.

    வேலுாரில் தயார் செய்யப்படும் இந்த பொம்மைகள், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை ரகத்துக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது.

    பிளாஸ்டர் ஆப் பாரீஸ் எனும் ரசாயன கலவையால் தயார் செய்யப்படும் பொம்மைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், களிமண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.

    அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.

    விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-

    கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.

    மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.
    • கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 26-ந்தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது.

    விழாவையொட்டி கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை பகுதிக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வண்ணமிகு அழகான கண்களை கவரும் வகையில் கொழு பொம்மைகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதில் ஈடுபட்டுள்ள தங்கமணி கூறியதாவது:-

    கொழு பொம்மைகள் அனைத்தும் களி மண்ணால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம், மதுரை மீனாட்சி கோவில், திருப்பதி பிரமோத்சவம் போன்ற பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகள், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன் குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.

    இதுதவிர கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, ரூ. 50 முதல், ரூ. 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புபோல் ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை.

    வழக்கமான வியாபாரிகளை, பொம்மை தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பொம்மைகளை அனுப்புகின்றனர். இருந்தும், நவராத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளததையடுத்து எதிர்பார்த்த விற்பனை தொடர்ந்து மந்தமாக உள்ளது.

    செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்வார்கள். ஆனால் 2 ஆண்டுகளாக ஆர்டர்கள் கிடைக்காமல் தற்போது விற்பனை மந்தமாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

     திருப்பூர்:

    அம்பிகையை தினமும் ஒவ்வொரு வடிவில் வழிபடும், நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு வருகிற 25ல் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவின் 9-வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 10வது நாள், விஜய தசமியாகவும் வழிபடப்படுகிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்தும் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதற்காக 9 கொலு படிகள் அமைத்து பொம்மைகளை அலங்கரித்து வழிபாடு நடத்தப்படுகிறது.நவராத்திரி விழா துவங்க உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.மண் பாண்ட விற்பனைக்கடைகளில் மண்ணால் செய்யப்பட்ட, சுவாமிகளின் சிலைகள் மற்றும் பறவை, மனிதர்கள் என அனைத்து வகையான சிலைகள் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

    இதில் தசாவதாரம், திருமணம், அஷ்டலட்சுமி, ஆண்டாள், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, திருமண நிகழ்வு, கல்யாண சீர்வரிசை, தசாவதாரம், படகு, கிருஷ்ணவதாரம் என பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் வகையில் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும் சிவன், பார்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப்பொய்கையில் தாமரை மீது முருகன் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக்கூடம் எனகுழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவர்கள் என பலவித பொம்மைகள் தனித்தனியாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தனி கொலு பொம்மைகள் 50 முதல் 600 ரூபாய் வரையிலும், கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ×