search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளத்தில் மூழ்கி"

    மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் மாதேஷ்குமார் (வயது17). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மன்னார்குடி அருகே உள்ள அம்மா குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மாதேஷ்குமார் குளத்தில் மூழ்கி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய நண்பர்கள் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி மாயமான மாதேஷ் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி விட்டது தெரியவந்தது. குளத்தின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஆவிலிப்பட்டி வீரசின்னம்பட்டியை சேர்ந்த வடிவேல் மகன் செல்வமுருகன் (வயது4). வடிவேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயாரும் இல்லாத நிலையில் செல்வமுருகன் தனது பாட்டி சரஸ்வதி பராமரிப்பில் இருந்து வந்தார்.

    சரஸ்வதி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். வேலைக்கு சென்ற அவர் தனது பேரனையும் உடன் அழைத்து சென்றார். அதே பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் மூழ்கினான்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 49), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர், அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுதர்சனை தேடி குளத்துக்கு சென்றனர். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடைகள் குளத்தின் கரையில் இருந்தது. ஆனால் சுதர்சனை காணவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்தின் உள்ளே இறங்கி சுதர்சனை தேடினர். அப்போது, சேற்றில் புதைந்த நிலையில், சுதர்சனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. குளத்தில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் இறந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுதர்சனுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 
    நாகை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். இதுதெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே தண்ணீரில் விழுந்த துணியை எடுக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி மாணவி பலியானார். தாய்-தங்கை கண் முன்னே இந்த பரிதாபம் நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பட்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸி (வயது 32). இவர்களுடைய மகள்கள் பவித்ரா தர்ஷினி (10) மற்றும் வைஷாலினி (8). பட்டம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பவித்ரா தர்ஷினி 4-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் வைஷாலினி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று காலையில் பட்டம்பாளையத்தில் உள்ள பெரியகுளத்திற்கு ரோஸி, பவித்ரா தர்ஷினி மற்றும் வைஷாலினி ஆகிய 3 பேரும் சென்றனர். இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் சுமார் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வழியாக முதலில் ரோஸியும், அவரை தொடர்ந்து வைஷாலினியும், பவித்ரா தர்ஷினியும் கடந்து சென்றனர். முதலில் தண்ணீரை கடந்து ரோஸியும், வைஷாலினியும் சென்று விட்டனர். இவர்களுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த பவித்ரா தர்ஷினி கழுத்தில் போட்டிருந்த சால் (துணி) தண்ணீரில் விழுந்தது. அதற்குள் அந்த துணி குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது.

    இதையடுத்து பவித்ரா தர்ஷினி அந்த துணியை எடுக்க சென்றார். ஏற்கனவே குளத்தில் மண் அள்ளப்பட்ட இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது மாணவிக்கு தெரியவில்லை. இதையடுத்து அந்த துணியை எடுக்க முயன்றபோது திடீரென்று தண்ணீரில் மாணவி மூழ்கினாள். அப்போது “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் போட்டாள். மகள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த ரோஸி அதிர்ச்சியடைந்து அவளை காப்பாற்ற முயன்றார். அப்போது ரோஸியும் தண்ணீரில் மூழ்கினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டும், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ரோஸியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பவித்ரா தர்ஷினியை மீட்க முடியவில்லை.

    இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவினாசி தீயணைப்பு துறை வீரர்களும், பெருமாநல்லூர் போலீசாரும் விரைந்து சென்று பவித்ரா தர்ஷினியை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேரம் தேடலுக்கு பிறகு பவித்ரா தர்ஷினியின் இறந்த நிலையில் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்-தங்கை கண் முன்னே தண்ணீரில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூரில் நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி பனியன் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). பனியன் தொழிலாளி. நேற்று மாலை வேலை முடிந்து நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் குளத்தில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அரைகுறையாக நீந்த தெரிந்த பழனிசாமி ஆர்வத்தால் இவரும் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மூழ்க தொடங்கினார். அதை அறிந்த அவர் அலறி சத்தம்போட்டார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பழனிசாமியை காப்பாற்ற முயன்றனர். பழனிசாமியை கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×