search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஆற்றில்"

    • துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
    • ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீசாக பணிபுரிந்து வந்தவர் துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.இதையடுத்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று தேடினர் இரவு நேரம் தேடும் பணீயை நிறுத்தினர். இந்தநிலையில் ்தொடர்ந்து 2-வது நாளாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட துரைமுருகனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
    • அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
    • கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    • நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    ஈரோடு:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் முழு அளவு உபரி நீரும், காவிரியில் திறக்கப்படுகிறது.

    கடந்த 5 நாட்களாக காவிரியில் அதிகமாக தண்ணீர் சென்றதால் ஈரோடு மாவட்ட காவிரி கரை ஓரங்களில் வசிப்போ ருக்கு வெள்ள அபாயம் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரையில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் நீர் சூழ்ந்தது.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 12 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 700 பேர் வரை முகாமில் பாதுகா ப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய வசதியை மாவட்டம் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்க ப்பட்டது.

    கடந்த இரு தினங்களுக்கு முன், 1.95 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றது. நேற்று முன்தினம் இரவில், 65,000 கனஅடியாக குறைந்ததால் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஈரோட்டில் மட்டும் 50 பேர் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் நேற்று மதியத்துக்கு பின் 65,000 கனஅடியில் இருந்து மாலை 4 மணிக்கு 95,000 கனஅடியாகவும், 5.30 மணிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும் தண்ணீர் வெளியேற்றம் உயர்ந்துள்ளது. அத்துடன் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மழை நீரும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள 2,500 கனஅடி நீரும் காவிரியில் கலப்பதால் 1.10 லட்சம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முகாம்களில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த மக்கள் இன்று மீண்டும் முகாம் நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றுக்கு மேலும் அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
    • அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மக்களுக்கு நிரந்தரமாக சீரான குடிநீர் வழங்கு வதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.412.12 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்டத்தி ற்கான பணிகள் தொடங்க ப்பட்டது.

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சைக்காளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மன்ன தாம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் கிணறு அமைக்க ப்படுகிறது. அதில் இருந்து குழாய் மூலம் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் கூடுதலாக கிணறு அமைக்க ப்படுகிறது.

    அங்கிருந்து புஞ்சைக் காளமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட கணபதி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கு நீரை சுத்திகரிப்பு செய்ய ப்படுகிறது.

    இதன் மூலம் மொடக் குறிச்சி, எழுமாத்தூர், பள்ளியூத்து, கஸ்பாபேட்டை ஆகிய 4 இடங்களில் நீர் உந்து நிலையங்களில் கொண்டு சென்று பின்னர் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் புதிதாக 25 தரை மட்ட நீர் தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட உள்ளது.

    மேலும் 25 தரை மட்ட நிர் தேக்க தொட்டிகளில் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 554 மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள 225 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீ ரைக் கொண்டு சென்று அதன்மூலம் வீட்டு இணைப்பு களுக்கு நேரடி யாக குடிநீர் வழங்க உள்ளனர்.

    இதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் 2 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் பயன்பெரும் வகையில் 20.50 மில்லியன் லிட்டர் எடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 23 ஊராட்சிகளைச் சேர்ந்த 442 குக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்டம் பாசூர் பேரேஜ்க்கு அருகே உள்ள மன்னதாம்பாளையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பேரேஜ் அருகே இத்திட்டம் அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் கோடை காலங்களில் பேரேஜில் தண்ணீர் தேக்கும் போது இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதிலிருந்து காவிரி ஆற்றின் கரைப்பகுதியான மன்னதாம்பாளையத்தில் கூடுதலான கிணற்றுக்கும் பெரிய குழாய் அமைக்கும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

    அதேபோல் கணபதி பாளையத்தில் அமைக்க ப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையம் பணியும், 4 நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, புதிதாக ஊராட்சி களில் கட்டப்பட்டு வரும் 225 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொய்வ டைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்ரமசிங்கபுரம் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் பரசுராமன் (30). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.

    பரசுராமன் தனது நண்பர்களான சாவடிப்பாளையம் புதூரைச் சேர்ந்த மதன், பிரபு, முரளி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் மதியம் சாமி கும்பிட்டு விட்டு காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது பரசுராமன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு அப்பகுதியில் பரசுராமனை தேடிப் பார்த்தனர். ஆனால் அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பரசுராமனின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

    • காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

    கரூர்:

    கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26). இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சில பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் பரிகாரம் செய்வதற்காக தனது ஊருக்கு வந்துள்ளார்.பரிகாரம் செய்த பிறகு பரிகாரம் செய்யப்பட்ட தகரத்திலான தகடை ஆற்றில் விடுவதற்காக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு வந்துள்ளார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் (17), அருண்குமார் (22) ஆகிய 2 பேரும் வந்துள்ளனர்.

    கலையரசன் பரிகார தகடை ஆற்றில் விட்டு விட்டு கரைக்கு வந்துள்ளார். ஆற்றில் அருண்குமாரும், சுரேந்தரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், தண்ணீரின் வேகத்தின் காரணமாக அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதைப் பார்த்த கலையரசன் அவரை காப்பாற்ற முயற்சித்தபோதும் சுரேந்தர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார். சுரேந்தர் தண்ணீரில் மூழ்கியது குறித்து அருண்குமார், கலையரசன் ஆகியோர் அவர்களது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதுபோல முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கழுகூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் மூழ்கிய சுரேந்தரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சிறுவன் ஒருவன் நேற்று காவிரி ஆற்றில் மூழ்கிய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.
    • மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பவானி:

    மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதையொட்டி பவானி காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் ஆற்றங் கரையோரம் உள்ள பொது மக்கள் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் வடியாத தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தண்ணீர் அதிகம் செல்வதால் பவானி பூ மார்க்கெட் வீதி அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் நடந்து செல்லபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மற்றும் சைக்கிள் ஆகியவை செல்ல அனுமதி இல்லை.

    பவானி ஆற்றில் கடந்த வாரம் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆகயத்தாமரை அதிகளவில் அடித்து வந்து தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது. அதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

    இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பவானி கூடுதுறை அருேக உள்ள அய்யப்பா சேவா மண்டபம் படித்துறை காவரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளித்து வருகிறார்கள்.

    • காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    கரூா்:

    காவிரி ஆற்றில் வெள்ள அபாய ஏற்பட்டுள்ளதால் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் என கரூா் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

    கரூா் மாவட்டம், புகளூா் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாயனூா் கதவணை, செல்லா ண்டியம்மன்கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகியப் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மேட்டூா் அணையிலிருந்து 2 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடுவதால் கரூா் மாவட்டத்தில் காவிரிக்கரை ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வா் உத்தரவின்படி காவிரி கரையோரப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். கரூா் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் அமைந்திருக்கின்றன. அந்த 26 கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினா் மற்றும் பிறத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

    தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தவிட்டுப்பாளையத்தில் 150 குடும்பத்துக்கு மேல் தங்க வைப்பதற்கு உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

    கரூா் மாவட்டத்தில் மாயனூா் கதவணையில் தற்போது 1.60 லட்சம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 லட்சம் கனஅடி தண்ணீா் வரவாய்ப்புள்ளது. தொடா்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிா்வாகம் முழு அளவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்தவித காரணத்துக்காகவும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்"

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூரு சிங்காபுரம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில்ஸ்ரீதர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக நேற்று அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் சென்றுள்ளார். படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் அவர்கள் குளித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஸ்ரீதர் மட்டும் கரை திரும்பவில்லை.

    இது குறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், ராஜா வாய்க்காலில் மாணவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் நேற்று மாலை வரை தேடினர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு துறையினர் சென்று விட்டனர். மீண்டும் 2 -வது நாளாக இன்று (திங்கட்கிழமை) காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜா வாய்க்காலில் பரிசல் மூலம் கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் விமானப்படை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையில் உலகப்பெருங்கடல் தினத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் கந்தசாமிக்கண்டர், பரமத்தி பி.ஜி.பி. மற்றும் மெட்டாலா லயோலா ஆகிய கல்லூரியின் தேசிய மாணவர் விமான படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பரமத்திவேலூர் பேருந்து நிலையம் முதல் காவிரி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி உலகப்பெருங்கடல் தினத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கந்தசாமி கண்டர் கல்லூரியின் முதல்வர் தங்கராசு விழாவை தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, காவிரி ஆற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு கையுறைகளை வழங்கி பணிகளை பாராட்டினார்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப் படுத்தினர்.தேசிய விமானப்படை மாணவ, மாணவியர்களின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ×