search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நெல்லை   வாலிபர்
    X

    காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நெல்லை வாலிபர்

    மொடக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்ரமசிங்கபுரம் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் பரசுராமன் (30). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.

    பரசுராமன் தனது நண்பர்களான சாவடிப்பாளையம் புதூரைச் சேர்ந்த மதன், பிரபு, முரளி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் மதியம் சாமி கும்பிட்டு விட்டு காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது பரசுராமன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு அப்பகுதியில் பரசுராமனை தேடிப் பார்த்தனர். ஆனால் அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பரசுராமனின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×