search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி கொலை"

    • இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார்.
    • இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரை சேர்ந்தவர் நர்கிஸ் (வயது 25). கல்லூரி மாணவியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரான இர்பான் (வயது 28)என்பவரும் வந்துள்ளார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இர்பான் இரும்பு கம்பியால் நர்கிசை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இர்பானை கைது செய்தனர்.

    விசாரணையில் அவரும், நர்கிசும் காதலித்து வந்தது தெரியவந்தது. இர்பான் ஒரு தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நர்கிசை திருமணம் செய்து வைக்க நர்கிசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் நர்கிஸ் இர்பானுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இது இர்பானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே தனக்கு கிடைக்காத நர்கிசை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் அறிந்து வைத்தார்.

    மேலும் நர்கிஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நேற்று பூங்காவில் நர்கிசுடன் வாக்குவாதம் செய்ததும், அப்போது இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • எனது கணவர் அடிக்கடி எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசி வந்தார்.
    • சம்பவத்தன்று சுப்புலட்சுமியை எனது கணவர் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 20). கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சுஜய் (27), அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியான ரேஷ்மா (23) ஆகியோர் சுப்புலட்சுமியை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. கேரள மாநிலம் கண்ணூரில் பதுங்கி இருந்த தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ரேஷ்மாவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் கேரள மாநிலம். நான் கோவை இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த எனது கணவரான சுஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அடுத்து சில மாதங்களில் நான் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது காதலனை பிரிந்து கேரளாவுக்கு சென்றேன்.

    அதன்பின்னர் சுஜய், கவுண்டம்பாளையத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி வேலைக்கு சேர்ந்து உள்ளார். அவர் வேலைக்கு வரும் போது அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அவர் சுஜயிடம் கூறி உள்ளார். உடனடியாக அவர் அந்த வாலிபரை எச்சரித்து பிரச்சினையை சரி செய்து உள்ளார். இதனால் எனது கணவர் மீது சுப்புலட்சுமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி உள்ளது. சுஜய் என்னை காதலிப்பதை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகி வந்தார்.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சுஜயை நான் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மீண்டும் எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளேன்.

    இந்தநிலையில் எனது கணவர் அடிக்கடி எனக்கு தெரியாமல் சுப்புலட்சுமியுடன் பேசி வந்தார். இதனையடுத்து நான் அவரை கண்டித்தேன். அப்போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை விட்டு எனது கணவர் பிரிந்து சென்று விடுவாரோ என்ற பயத்தில் இருந்த நான் சுப்புலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள், பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினேன்.

    சம்பவத்தன்று சுப்புலட்சுமியை எனது கணவர் எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த என்னை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் எனது கணவர் என்னை திருமணம் செய்ததை மறைத்து சுப்புலட்சுமியுடன் பழகியது எனக்கு தெரியவந்தது.

    நான் சுப்புலட்சுமியிடம் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது கர்ப்பமாக உள்ளேன். எனவே எனது கணவரிடம் பேசுவதையும், பழகுவதையும் கைவிட வேண்டும் என கூறினேன். அவர் எனது கணவரை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டோம். இதில் ஆத்திரம் அடைந்த நான் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் வயிற்றில் குத்தினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். எனது கணவர் சத்தம் வெளியே வராமல் இருக்க மற்றொரு கத்தியை எடுத்து அவரது கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் நாங்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு தப்பி சென்றோம். கண்ணூர் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சுஜய், ரேஷ்மா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்தவர் சங்கீதா.

    இவர் கிளிமானூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி சென்றனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓடி செல்வதை கண்டனர். மேலும் வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

    அந்த வாலிபர் தான் சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த வாலிபர் யார்? எதற்காக அவர் சங்கீதாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்யாவின் மரணம் குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது.
    • தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார்.

    ஆலந்தூர்:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்சார ரெயில் முன்பு தள்ளி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி கூட கொலைகள் நடக்குமா? என நினைக்க தோன்றும் வகையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சோகம் மறைவதற்குள் அவரது தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஒருதலைக்காதலால் ஒரு அப்பாவி மாணவி மற்றும் அவரது தந்தை உயிர்கள் பறிபோய் உள்ளது, சோகத்திலும் சோகத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலையுண்ட சத்யா பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

    இவரது தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கும் கணவர் மாணிக்கத்துக்கும் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த தம்பதிக்கு சத்யா பிறந்தார்.

    அதன் பிறகு அவர்களுக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தது. 15 வயதான 2-வது மகள் பரங்கிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 3-வது குழந்தையான செல்விக்கு தற்போது 2½ வயது தான் ஆகிறது.

    ராம லட்சுமியின் தங்கை காஞ்சனா லஞ்ச ஒழிப்பு துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது தம்பி சீனிவாசன் எழும்பூரில் போலீஸ்காரராக இருந்து வருகிறார். இவருக்கும் பெண் குழந்தை தான் உள்ளது. இதனால் தங்களுக்காவது ஆண் வாரிசு கிட்டும் என்ற நம்பிக்கையில் ராமலட்சுமி தம்பதியினர் இருந்தனர்.

    ஆனால் 3-ம் பெண்களாக பிறந்ததால் சற்று வருத்தம் அடைந்தனர். ஆனாலும் அவர்கள் அதை காட்டி கொள்ளாமல் பாசமாக தான் வளர்த்து வந்தனர்.

    மூத்த மகளான சத்யா பெற்றோர் மீது அதிக பாசத்துடன் இருந்தார். பெற்றோர் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்தார்.

    புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் 3- வது குழந்தை பிறந்ததும் அதற்கு பால் கொடுக்கமுடியாமல் ராமலட்சுமி கஷ்டப்பட்டார், இதை அறிந்த சத்யா தனது தங்கைக்கு பாட்டிலில் பால் கொடுப்பது. தொட்டிலில் தூங்க வைப்பது என ஒரு தாயாக மாறி பராமரித்து வந்தார். தனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அதை மூடி மறைக்காமல் சத்யா தனது பெற்றோரிடம் தெரிவிப்பார்.

    அப்படி தான் கொலையாளி சதீஷ் தன்னை பின் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் சதீசின் நடத்தை சரியில்லை, இதனால் அவனது பேச்சுக்கு மயங்கி விடாதே என்று மகளை எச்சரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சத்யா முதலில் நட்பாக பழகினாலும் அதன்பிறகு சதீசை ஏறெடுத்து பார்க்காமல் கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனாலும் சதீசின் செயல் எல்லை மீறி போனதால் இது தொடர்பாக 2 முறை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

    ஆனால் 2 குடும்பத்தினரும் போலீஸ் துறையை சேர்ந்ததால் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். சதீஷின் தந்தையும் என் மகன் இனிமேல் தொந்தரவு எதுவும் கொடுக்கமாட்டான் என வாக்குறுதிகொடுத்தார். இதனால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விட்டு விட்டனர். ஆனாலும் சதீசின் கொட்டம் அடங்கவில்லை.

    சத்யாவை விரட்டி விரட்டி சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் சத்யா உயிருக்கு ஆபத்து எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக ராமலட்சுமியின் தந்தை தினமும் பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு வருவார். பின்னர் பிளாட்பாரத்திற்கும் கூடவே வந்து மின்சார ரெயிலில் ஏற்றி விட்டு தான் செல்வது வழக்கம்.

    அது போல தான் சம்பவம் நடந்த நேற்று முன்தினமும் தாத்தா பேத்தியை அழைத்து கொண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அன்று அவர் பிளாட்பாரத்துக்கு வராமல் ரெயில் நிலையத்துக்கு வெளியே இறக்கி விட்டு சென்றார். இதை ஏற்கனவே நோட்டமிட்டு அங்கு காத்திருந்த சதீஷ் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்த சத்யா அருகே சென்று கடைசியாக தனது ஆசையை தெரிவித்தார். உடனே சத்யா இனிமேல் என்னுடன் பேசாதே, என்னை விட்டு விலகி செல் என கோபமாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் என்னை திருமணம் செய்யாத நீ இனி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என ஆவேசத்துடன் ரெயில் முன்பு தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்துள்ளது.

    சத்யாவின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய செய்துள்ளது. அவரது தாய் ராமலட்சுமி மகள் மற்றும் கணவரை ஒரே நேரத்தில் பறி கொடுத்து விட்டு அடுத்து 2 குழந்தைகளுடன் என்ன செய்ய போகிறோமோ என்ற வேதனையில் தவித்து வருகிறார். தன்னை தாய் போல கவனித்து வந்த அக்காளை காணாது 2½ வயது பிஞ்சுமனம் ஏங்குவது கண்கலங்க வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
    • அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை ரெயில் முன்பு தள்ளி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

    இக்கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த கொலையாளி சதீசை ரெயில்வே போலீசாரே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பரபரப்பான மதிய வேளையில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை பயணிகள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் சாட்சிகள் வலுவாகவே உள்ளன.

    அதே நேரத்தில் ரெயில் நிலையத்தில் உள்ள கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ரெயில்வே போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த விரைவில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இந்த அதிகாரி நியமிக்கப்பட்டவுடன் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

    இந்த வழக்கை பொறுத்தவரையில் மற்ற வழக்குகளை போல் அல்லாமல் சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    கொடூரமான கொலை சம்பவம் என்பதால் இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் ஓரளவுக்கு தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதையடுத்து அதற்கு தேவையான ஆவணங்களை சேகரிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கு விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • சத்யபிரியாவின் தாயான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி புற்று நோயால் அவதிப்பட்டு வரும் உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.
    • ராமலட்சுமியின் உடல் நிலை சரியாகாத காரணத்தால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

    மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது தந்தை மாணிக்கம் அதிர்ச்சியில் தற்கொலை செய்துக் கொண்டார்.

    ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கத்தின் உடற் கூறாய்வு சென்னை மருத்துவமனையில் தொடங்கியது. இதன் முதற்கட்ட விசாரணையில் அவர் மதுவில் மயில் துத்தம் என்கிற வேதிப்பொருளை கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

    மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது அவரது குடும்பத்தின் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்து போயிருக்கிறார்கள்.

    இதற்கிடையே மாணவி சத்யபிரியாவின் தாயான போலீஸ் ஏட்டு ராமலட்சுமி புற்று நோயால் அவதிப்பட்டு வரும் உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.

    மகள் கொடூரமாக ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்ததை எண்ணி கண்ணீர் மல்க தவித்து வருகிறார்.

    ராமலட்சுமியின் உடல் நிலை சரியாகாத காரணத்தால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அங்கு தங்கி இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • உன் மகளை கொன்று விட்டார்கள் என்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறந்து வந்த தகவலை கேட்டு பதறியடித்து கொண்டு ஓடினார் ராமலட்சுமி.
    • மாணவி சத்தியாவுடன் ரெயில் நிலையத்தில் நின்ற அவரது தோழிகள் தங்கள் கண் முன்னால் தோழி கொல்லப்பட்டதை பார்த்து பதறி போனார்கள்.

    அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும் வீட்டுக்குள் சென்று விட்டு வேலைகளில் மூழ்கினார்.

    போய் வருகிறேன் என்று சொல்லி சென்ற மகள் ஒரேயடியாக போக போகிறாள் என்பது பெற்ற மனசுக்கு தெரியவில்லை. மிடுக்கான நடையும், எடுப்பான தோற்றமும், கம்பீரமும் கொண்ட மகளும் தன்னை போல் போலீசுக்கும் தகுதியாக இருப்பாள் என்று மனசுக்குள் கணக்கு போட்டிருந்த ஏட்டு ராமலட்சுமி மகள் கல்லூரி படிப்பை படிக்கட்டும் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானமும் ஆகியிருக்கிறார்.

    ஆனால் பாழாய் போன காதல் வரும். எமன் வடிவில் சதீஷ் வருவான் என்று நினைத்து இருக்கவில்லை.

    உன் மகளை கொன்று விட்டார்கள் என்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறந்து வந்த தகவலை கேட்டு பதறியடித்து கொண்டு ஓடினார் ராமலட்சுமி.

    தண்டவாளத்தில் தலை துண்டித்து பிணமாகி கிடந்த மகளின் உடலை பார்த்து கதறியது அங்கிருந்த பயணிகளை மட்டுமல்ல பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் கண்ணீர் விட வைத்தது.

    பாவி... என் மகளை இப்படி அநியாயமாக கொன்று விட்டானே என்று கதறி துடித்த அந்த தாயை ஆறுதல்படுத்த முடியவில்லை.

    தாயை மட்டுமல்ல... அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துதான் போனார்கள்.

    எத்தனையோ இளசுகளை தினமும் பார்த்து வருகிறேன். கொஞ்சி கொஞ்சி பேசுவார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கோபித்து கொள்வார்கள். அவ்வளவு தான். ரெயில் வந்ததும் போய் விடுவார்கள்.

    இப்படித்தான் தினமும் ரெயில் பயணங்களை பார்த்து வருகிறேன் என்ற அந்த ரெயில் நிலைய துப்பரவு தொழிலாளி பிரசன்ன குமாரி இப்படிப்பட்ட கொடூரனை நான் பார்த்ததில்லை. கொஞ்ச நேரமாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தது.

    அந்த நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரெயில் வந்தது. பிளாட்பாரத்தில் நின்ற அந்த புள்ளையை பாவி மிதித்து தண்டவாளத்தில் தள்ளுவதற்கும், ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

    படுபாவி ரெண்டு அடியை கூட அடித்து தன் ஆத்திரத்தை தீர்த்து இருக்கலாம் என்றார்.

    மாணவி சத்தியாவுடன் ரெயில் நிலையத்தில் நின்ற அவரது தோழிகள் தங்கள் கண் முன்னால் தோழி கொல்லப்பட்டதை பார்த்து பதறி போனார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

    பார்த்தவர்களே இப்படி பரிதவிக்கும்போது பதினெட்டு ஆண்டுகள் கண்ணுக்குள் வைத்து வளர்க்கப்பட்ட செல்ல மகள் அநியாயமாக கொல்லப்பட்டதை அறிந்தால் அந்த குடும்பம் எப்படி கதறும்.

    சத்தியாவின் தந்தை மாணிக்கம் கார் ஓட்டினாலும் அவரது எண்ணம் மட்டும் எப்போதும் மகள் மீதே ஓடிக்கொண்டிருக்குமாம். தினமும் மகள் ஆசைப்பட்டு கேட்கும் பண்டங்களை எல்லாம் வாங்கி வருவாராம்.

    `அப்பா ப்ளீஸ்பா' என்று கொஞ்சும் குரலில் சாதித்து வந்த சத்தியாவை கொன்று விட்டார்களா? என் இளவரசி போய்விட்டாளா?

    தகவல் கேட்டு அந்த பாசக்கார தந்தையின் இதய துடிப்பும் நின்று போனது. பாசமான மகளையும், அன்பான கணவரையும் இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தவிக்கிறார் பரிதாபத்துக்குரிய தாய் ராமலட்சுமி.

    ரெயில் நிலையங்களை கொலைக்களமாக மாற்றி வருவது இது முதல்முறை அல்ல. இதேபோல் தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயரான சுவாதியை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே அவரை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற சம்பவத்தை இன்னும் யாரும் மறந்து இருக்க முடியாது.

    ரெயில் நிலையங்களில் கேமராக்கள் கண்காணிப்பது நடந்த குற்றத்தை பார்க்க மட்டும் உதவும். அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். எல்லை மீறும் இளஞ்ஜோடிகள், மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர்கள், வாக்குவாதங்களில் ஈடுபடுபவர்களை உங்களின் பாணியில் கண்டியுங்கள்.

    • சத்திய பிரியா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தோம்.

    சென்னை:

    மாணவி சத்திய பிரியா படுகொலை சம்பவம் அவரது குடும்பத்தினடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாணவி சத்தியபிரியாவின் தாயார் காவல் துறையில் ஏட்டாக இருக்கிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் நிறைய பேர் போலீஸ் துறையிலேயே பணிபுரிகிறார்கள்.

    அவரது உறவினரான பெண் போலீஸ் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் சத்திய பிரியாவின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதே குடியிருப்பில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ் வசித்து வருகிறார்.

    அவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வருவார். சத்திய பிரியா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

    இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தோம். அப்போது போலீசார் சதீசை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு சத்திய பிரியாவின் தாயாரை சதீஷ் நேரில் சந்தித்து இனி நான் சத்திய பிரியாவை தொந்தரவு செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    சத்திய பிரியா வெளியில் செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை மட்டும் நடத்தினார்கள். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை போலீசார் விசாரணை நடத்தி சதீஷ் மீது கைது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த படுகொலை சம்பவம் நடக்காமல் இருந்திருக்கலாம்.

    எங்கள் குடும்பத்தினரும் பலமுறை சதீசை கண்டித்துள்ளோம். ஆனால் அவர் கேட்கவில்லை.

    இத்தனை ஆண்டு காலம் வளர்த்து எந்த தவறும் செய்யாத நிலையில் சத்திய பிரியாவை சதீஷ் கொடூரமாக கொன்றுள்ளார். எனவே அவருக்கு மரண தண்டனை வழங்கினாலும் தவறு இல்லை. சதீஷ் நடவடிக்கை தொடர்பாக அவரது தாயார், சகோதரி ஆகியோரிடமும் தெரிவித்துள்ளோம். அவர்களும் அவரை உரிய முறையில் கண்டிக்கவில்லை. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர். இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாணவியின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

    மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.

    மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×