search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவன்"

    • சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புனே:

    மராட்டிய மாநிலம் புனேயில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 21 வயது மாணவர் ஒருவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை இவர் வாகோலி பகுதியில் உள்ள பகோரி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓரினச்சேர்க்கை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் விசாரணையை தொடங்கினோம்.

    அப்பகுதியில் நடை பெற்று வரும் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
    • மருத்துவர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை காத்துப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் சங்கர் (வயது 42). இவரது மகன் கார்த்தி (20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி அவரது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அணையில் நீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது.

    நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். உடன் அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய கார்த்திக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது தந்தை சங்கர் பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை என்று கூறினார்.
    • செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பார்மசி படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் கல்லூரி மாண வன் தூக்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார். காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மூத்த மகன் அருள் பெனடிக் (வயது 19). இவர் நாகப்பட்டி னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். இந்நிலையில் அருள் பெனடிக் தனது பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை நண்பர்களோடு சேர்ந்து வேற படிப்பை படிக்க போவதாக கூறினார். அதற்கு அருள்பெனடிக் தந்தை லூர்து தாஸ் வேறு கல்லூரியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்து தாஸ் மனைவி மற்றும் 2-வது மகன் யுவராசுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளி யூர் சென்றனர். நிகழ்ச்சிக்கு அருள் பெனடிக்கையும் வருமாறு பெற்றோர் அழைத்தனர். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தார். இதனையடுத்து அருள் பெனடிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை லூர்துதாஸ் பெனடிக்கின் செல்போனிற்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது. இதனால் அருள் பெனடிக்கின் நண்பர்களை தொடர்பு ெகாண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார். 

    அதன்படி அருள்பெனடி க்கின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது அருள் பெனடிக் தூக்கில் பிணமாக தொங்கி யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து அருள்பெனடிகின் நண் பர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அருள்பெனடிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு பெனடிக்கை பரிசோ தித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினார். இது குறித்து காரைக்கால் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம்.
    • தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஓ.சி.ஐ.டி. என்ற தனிப்படை அமைக் கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்மைக்காலமாக திருச்சியிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள ஒ.சி.ஐ.டி. தனிப் படையினர் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு வாலிபர்கள் சில நின்று கொண்டு கல்லூரி மாணவரிடம் போதை மாத்திரை விநியோகம் செய்வதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதைடுத்து அந்த கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட நான்கு பேரை தனிப்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போதை மாத்திரை வெளியூரில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், விற்க இருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் உதவியுடன் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகளை விற்கும் முயற்சியில் இந்த கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் போதை மாத்திரை வாங்கியவுடன் பணத்தை கையில் கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு நம்பரில் கூகுள்பே செய்ய வேண்டுமாம். இதையடுத்து அந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு சென்ற பிறகுதான் போதை மாத்திரையை கும்பல் மாணவரிடம் கொடுப்பார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கல்லூரி மாணவன் உள்ளிட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் கல்லூரி முன்பு போதை மாத்திரை விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×