search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
    X

    காரைக்காலில் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

    • பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை என்று கூறினார்.
    • செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பார்மசி படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் கல்லூரி மாண வன் தூக்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார். காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மூத்த மகன் அருள் பெனடிக் (வயது 19). இவர் நாகப்பட்டி னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். இந்நிலையில் அருள் பெனடிக் தனது பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை நண்பர்களோடு சேர்ந்து வேற படிப்பை படிக்க போவதாக கூறினார். அதற்கு அருள்பெனடிக் தந்தை லூர்து தாஸ் வேறு கல்லூரியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்து தாஸ் மனைவி மற்றும் 2-வது மகன் யுவராசுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளி யூர் சென்றனர். நிகழ்ச்சிக்கு அருள் பெனடிக்கையும் வருமாறு பெற்றோர் அழைத்தனர். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தார். இதனையடுத்து அருள் பெனடிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை லூர்துதாஸ் பெனடிக்கின் செல்போனிற்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது. இதனால் அருள் பெனடிக்கின் நண்பர்களை தொடர்பு ெகாண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார்.

    அதன்படி அருள்பெனடி க்கின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது அருள் பெனடிக் தூக்கில் பிணமாக தொங்கி யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து அருள்பெனடிகின் நண் பர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அருள்பெனடிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு பெனடிக்கை பரிசோ தித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினார். இது குறித்து காரைக்கால் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×