search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் பேச்சு"

    • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
    • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

    • படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    அம்மாபேட்டை:

    பவானி வட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல்,புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்குதல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர்கள் மோகனசு ந்தரம், சதாசிவம், படவல் கால்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆராயி,பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

    முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படு கிறது.

    இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரி களும் வந்து தங்களது துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் நிவர்த்தி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர். இதனை பொதுமக்கள் அந்தந்த காலகட்டத்தில் செய்து கொள்ள வேண்டும் உதார ணமாக ஒரு சாதி சான்று குழந்தைகளுக்கு எடுப்பதாக இருந்தால் கடைசி நேரத்தில்தான் நாம் அதிகாரிகளை அணுகு கிறோம்.

    அதனைத் தவிர்த்து பட்டா மாறுதலாக இருந்தா லும் சரி, வாரிசு சான்றிதழாக இருந்தாலும் சரி அந்தந்த கால தேவைகளை அப்போதே அதிகாரிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    அரசு வழங்கும் நல திட்டங்களை பொது மக்கள் அந்தந்த கால கட்டத்தில் விழிப்பு ணர்வுடன் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான சில உதார ணங்களை நகைச்சுவை உணர்வுடன் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார். முன்னதாக காட்டூரில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் வரவேற்று பேசினார். முடிவில் பவானி தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார். 

    • போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.
    • வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது பானம் விற்பனையில் ஈடுபடு வர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மது பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்த ப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநிலஅளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு தொடர்பாக வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து மது விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மது பானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாகசு மார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, சப்-கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகன சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது என்று கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.
    • ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவையில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது தனித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்க ளின் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.

    அந்த வகையில் இளைஞர்களின் படைப்பாற்றலை மெருகேற்றிடவும், தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி உள்ளது.

    குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்கு கிறது. சமூக பொறுப்புணர்வு கொண்ட நபராக மேம் படுத்துகிறது. அதேபோல் இளைஞர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்களுடன் நேரடியாக கலந்து ரையாடி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திட வாய்ப்பளித்திடும் வகையில் இளைஞர்கள் இலக்கிய பயிற்சிப்பட்டறை, இலக்கியத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரே னும் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாண வரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க தேவையான இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கத்தில் வருகை தந்த மாணவ -மாணவிகள் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதே போல பள்ளிக்குத் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும்.

    குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு அமைத்திட வேண்டும். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கி மாண வர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
    • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு படிக்க வேண்டும் என்று கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து செல்லும்போது அவர்க ளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த புத்தாண்டில் மாண வர்கள் தங்களுக்கென்று தனி ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு தெளிவான நோக்கத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

    கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் இலக்கை நோக்கி நகருவதற்கு எளிதாக இருக்கும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளது போல், முன்காலத்தில் நல்வழிகாட்டுதலுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் தற்போது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டுவதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு இந்தியாவில் நிறைய மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளது. இந்த பல்கலைக் கழகங்களின் சேர்வதற்கு போட்டித் தேர்வுகள் உண்டு. பட்டப்படிப்பு படிக்கும் போதே இந்த தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும், இந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் போது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், இந்திய ஆட்சிப் பணித்தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    பின்னர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டார்.

    அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்க ளிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மகா லட்சுமி, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின ருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் ஞானபிரபா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி, உதவி பேரா சிரியர் (எஸ்.எப்.ஆர் கல்லூரி) நந்தினி, இளம் நிபுணர் சுமதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கல்பனா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • இந்த விழாவில் மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பெருமை தேடி தர வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் ஆகியோர் பேசினர்.

    முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். கலை நிகழ்ச்சி களை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    ஆர்வத்துடன் கலையை கற்கும்போது மாணவர்களின் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33 ஆயிரம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல் வட்டார அளவில் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

    கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவு மாணவ, மாணவிகள் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி, நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • குழந்தைகளை சிறந்த திறமையானவர்களாக உருவாக்க வேண்டும்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து விரிவாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    உலக தாய்ப்பால் வார விழா 2022 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை சிறப்பாக நடத்தி வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடையே தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்க ப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு "தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் கற்பிப்போம் ஆதரிப்போம்" என்ற கரு ப்பொருளை கொண்டுள்ளது.

    ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை அடையவும், ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதையும், சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்கள் குறித்தும், சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவாக்கிடும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

    எனவே, கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட்டு, கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு, சத்துணவு பெட்டகம் வழங்குதல், அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பதாகைகள் அமைத்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து கருவுற்ற தாய்மார்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மகளிர் சுய உதவிக்கு ழுவினரை கொண்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற கருவுற்ற மற்றம் பாலூட்டும் தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தாய்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்ப ட்டு வருவதை மேலும் துரிதப்படுத்தி, துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    • ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 மின்சார பெருவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இதுபோன்று மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் மின் சார்ந்த திட்டங்களைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி தனியார் கல்லூரியில் கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 மின்சார பெருவிழா கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் பேசும் போது தெரிவித்ததாவது:-

    மத்திய அரசு நாடு முழுவதும் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு மின்சார்ந்த திட்டங்களை வகுத்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானவைகள் சவுபாக்கியா, ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் மற்றும் செயல்பாடுகளால் மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, அதன் மூலம் மின் நுகர்வோர்கள் பெற்று வரும் பலன்களை நாடு முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு, ஜூலை மாதம் 25 முதல் 30 வரையிலான நாட்களில் நாட்டிலுள்ள 773 மாவட்டங்களில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி, 2047 மின்சார பெருவிழா நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மின்சார பெருவிழா கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறிய புகைப்படங்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் நுகர்வோர்களுக்கு அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இவற்றில் தேனி மாவட்டத்தில் சவுபாக்கியா, ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டத்தின் கீழ் புதிய மின்பாதைகள் அமைத்தல், புதிய மின்மாற்றிகள் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட மின்அளவிகள் பொருத்துதல், அதிக குறுக்களவு கொண்ட கம்பிகளாக மாற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் திட்ட மதிப்பீடு ரூபாய் 36 கோடி. இவற்றின் மூலம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 நகர பஞ்சாயத்துகளில் உள்ள நுகர்வோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மின் அழுத்தம், மின்தடை குறைதல், மின் தடை ஏற்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் 8 கிராமப்புறங்களில் மின் கம்பிகள் புதிதாக அமைக்கப்பட்டு 421 மின் நுகர்வோர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ரூ.135.84 லட்சம் மதிப்பீட்டில் மின் நுகர்வோர்களுக்கு மேற்குறிப்பிட்டவாறு சீரான மின் அழுத்தம், மின் தடை குறைப்பு ஆகிய நன்மைகள் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவற்றில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மின் விநியோக திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்யாயா கிராமின் ஜோதி யோஜனா திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு தேனி மின்பகிர்மான வட்டத்தில் மின்னிணைப்பு இல்லாத கிராமங்கள் இல்லை என்று மின்வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் மின் சார்ந்த திட்டங்களைக் கொண்டு, மின் நுகர்வோர்கள் தங்களது பகுதியினையும், தங்களது வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×