search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐம்பொன் சிலை"

    • ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
    • திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 ஐம்பொன் சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 4 சிலைகளும் உள்ளது.

    இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி குமரவேல் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளனர்.

    இதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.

    இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் கோவில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஐம்பொன் சிலைகள் உள்பட 7 சிலைகள் திருட்டு போயியுள்ளதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

    திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் கோவில் முன்பு ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் முழுவதும் பார்வையிட்டனர். சிலைகள் திருடப்பட்ட அறைக்குள் சென்று, தடயங்கள் சேகரித்தனர்.

    கொள்ளை குறித்து, பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
    • வேலூர் அருகே கருவேப்பிலைக்குள் மறைத்து கடத்தியபோது சிக்கியது

    வேலூர்:

    திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) இவர்கள் இருவரும் கட்டை பையில் கருவேப்பிலைக்குள் மறைத்து ரூ.1.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்தி வந்தனர்.

    வேலூர் அருகே உள்ள அரியூர் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவரும் பிடிபட்டனர்.

    இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெக்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டியபோது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.

    அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஙபின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இருந்து சிலை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கட்டை பையில் கருவேப்பிலைக்குள் பதுக்கி வைத்தனர்
    • வாலிபர்கள் 2 பேர் கைது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரியூர் ஆவாரம் பாளையம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது சந்தே கத்துக்கிடமாக பைக்கில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்த கட்டைப் பையை சோதனை செய்தபோது அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருந்தனர்.அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஐம்பொன்னால் ஆன 1 ½ அடி உயரமும், 5 ½ எடை கொண்ட அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிலையை கடத்தி வந்தவர்கள் திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) என்பது தெரியவந்தது.

    இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெ க்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டிய போது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.

    அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.

    இதனை யடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்ணன், வின்சென்ட் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களிடம் சிலையை வாங்க வந்தவர்கள் யார்?

    அம்மன் சிலையின் மதிப்பு குறித்தும் அந்த சிலை எங்கு யாரால் திருடப்பட்டது என்றும் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.
    • கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது.

    நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிப்பக்க பூட்டுகள் உடைத்து கதவுகள் திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள ஒன்றரை அடி உயரம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டனர்.

    கோவிலில் முன்பக்கம் இரும்பு கிரில், மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதேபோல மூலஸ்தானத்திலும் இரும்பு கதவு, மரக்கதவு உடைக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் ஆன வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிலைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

    உடைக்கப்பட்ட பூட்டுகள் அனைத்தையும் கோவிலின் அருகே வீசி உள்ளனர். கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் கோவில் உண்டியல் பணம் தப்பியது.

    மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
    • ஏராளமானோர் தரிசித்து சென்றனர்

    அணைகட்டு:

    ஒடுகத்தூரை சேர்ந்த கலைவாணி இவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்ட அடிக்கல் நாட்ட ஜேசிபி எந்திரத்தை வைத்து பள்ளம் தோண்டிகொண்டு இருந்தார்.

    அப்போது 6 அடி பள்ளம் தோண்டும் போது திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று மாட்டிகொண்டது.

    பின்பு இயந்திரத்தை நிறுத்தி விட்டு கையால் தோண்டியபோது சுமார் 3 அடி உயரம் சுமார் 40 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை தென்பட்டது.

    உடனடியாக சிலையை தண்ணீர் ஊற்றி துடைத்து விட்டு அதற்க்கு பால் அபிஷேகம் செய்து பூமாலை வைத்து பூஜை செய்து வணங்கினர்.

    பின்னர் சிலையை அணைக்கட்டு வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

    வீடு கட்ட தோண்டும் போது சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையை பரவியதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து சிலையை பார்த்து தரிசித்து சென்றனர்.

    • தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, சுவாமிமலை ஐம்பொன் சிலை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாகும்.
    • தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில்

    கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சி யம் மட்டுமல்லபல்வேறு கலைகளின் வாழ்விட மாகவும், பிறப்பிடமாகவும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    அதாவது தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பெயிண்ட்ஸ், கருப்பூர் பெயிண்ட், கலைத்தட்டு, திருபுவனம் பட்டு, சுவாமிமலை ஐம்பொன் சிலை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, நெட்டி வேலைபாடுகள் ஆகிய 10 பொருட்கள் புவிசார் குறியீடுபெற்றது ஆகும்.

    இந்த நிலையில் இந்த கலை களையும், கலைஞர்களை ஊக்குவி க்கவும், அவர்க ளை உலகம் அறியும் வகையில் செய்யவும் சென்னை அண்ணா நகர் வி .ஆர் .மாலில் முதல் கட்டமாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனையகம்- கண்காட்சி நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சென்னையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×