என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பழமையான 3 அடி உயரம் கொண்ட நடராஜர் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
    X

    பழமையான 3 அடி உயரம் கொண்ட நடராஜர் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
    • ஏராளமானோர் தரிசித்து சென்றனர்

    அணைகட்டு:

    ஒடுகத்தூரை சேர்ந்த கலைவாணி இவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்ட அடிக்கல் நாட்ட ஜேசிபி எந்திரத்தை வைத்து பள்ளம் தோண்டிகொண்டு இருந்தார்.

    அப்போது 6 அடி பள்ளம் தோண்டும் போது திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று மாட்டிகொண்டது.

    பின்பு இயந்திரத்தை நிறுத்தி விட்டு கையால் தோண்டியபோது சுமார் 3 அடி உயரம் சுமார் 40 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை தென்பட்டது.

    உடனடியாக சிலையை தண்ணீர் ஊற்றி துடைத்து விட்டு அதற்க்கு பால் அபிஷேகம் செய்து பூமாலை வைத்து பூஜை செய்து வணங்கினர்.

    பின்னர் சிலையை அணைக்கட்டு வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

    வீடு கட்ட தோண்டும் போது சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையை பரவியதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து சிலையை பார்த்து தரிசித்து சென்றனர்.

    Next Story
    ×