என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசி பெட்டி"

    • சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
    • முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.

    இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.

    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    • போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவில் அகிலா பேகம் (50) மற்றும் அவரது மகள் நஸ்ரித் பேகம் (18) ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.

    அகிலா பேகத்தின் கணவர் ரஹ்மத் உயிரிழந்து விட்ட நிலையில் தாய்-மகள் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அகிலா பேகம், நஸ்ரித் பேகம் இருவரும் சாப்பிட்டு விட்டு ஏ.சி.யை போட்டுக் கொண்டு நன்றாக தூங்கினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர்கள் வசித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது.

    இதையடுத்து வீட்டின் உரிமையாளரான ஜாகீர் உசேன் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    படுக்கை அறையில் பொறுத்தப்பட்டிருந்த ஏ.சி. பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்து சிதறி தொங்கிக் கொண்டிருந்தது. அகிலா பேகமும், நஸ்ரித் பேகமும் உடலில் 30 சதவீத தீக்காயங்களுடன் தரையில் கிடந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட போது வீடு முழுவதும் புகை மூட்டம் பரவியதால் இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீ சார் இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த நஸ்ரித் பேகம் பிளஸ்-1 மாணவி ஆவார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில்தான் அவர் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்துவிட்ட நிலையில், அகிலா பேகம் பள்ளி ஒன்றில் பணியாளராக வேலை செய்து மகளை படிக்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    தாய்-மகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் நஸ்ரித்தின் பள்ளி தோழிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ×