search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக அழகி போட்டி"

    • உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் உலக அழகி போட்டி முடிவடைகிறது.

    27 வருடங்களுக்கு பின்னர், உலக அழகி போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள், மாடல் உலகின் ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் இந்தியாவில் குவிந்துள்ளனர். அழகி போட்டியில் ஜெயிப்பவர்கள், கலந்து கொள்பவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இப்போதில் இருந்தே விளம்பர நிறுவனங்கள் போட்டியிட தொடங்கியுள்ளன.

    இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர்.

    ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.

    இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சினி ஷெட்டி சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து காட்சியளித்தார். அந்த படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "சேலை நமது கலாச்சாரத்தின் வளமான வரலாற்றையும், நமது அடையாளத்தின் துணியை நெசவு செய்யும் ஆழமான வேரூன்றிய மரபுகளையும் குறிக்கிறது," என்றும் அதுவே சேலையை தேர்வு செய்ததற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
    • ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எல்சால்வடார்:

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

    72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

    மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

    உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.

    இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

    • மாலத்தீவில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்
    • இந்த வெற்றியை "வெட்கக்கேடானது" என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்

    பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் மாலத்தீவில் "மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்" போட்டி நடைபெற்றது. அதில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, எரிகா ராபின் (24) எனும் இளம் பெண் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து இவ்வருடம் எல் சால்வடார் நாட்டில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 72-வது "குளோபல் மிஸ் யூனிவர்ஸ்" அழகி போட்டியில்,  முதல்முறையாக, பாகிஸ்தான் நாட்டின் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார்.

    இந்த வெற்றியை குறித்து எரிகா ராபின் தெரிவித்ததாவது:

    நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன். ஊடகங்கள் தெரிவிக்காத அழகான கலாச்சாரம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்; பழகுவதற்கு அன்பானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பாகிஸ்தான் நாட்டின் ருசி மிக்க உணவு வகைகளை உண்டு மகிழவும், எங்கள் நாட்டின் இயற்கையழகையும், பனிமலைகளையும் மற்றும் வயல்வெளிகளையும் காணவும் அனைவரையும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் எரிகா. அவர், அந்நாட்டின் புகழ் பெற்ற மாடலாக பல விலையுயர்ந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றியவர். மேலும், எரிகா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர்.

    இதற்கிடையே எரிகாவின் வெற்றியை "வெட்கக்கேடானது" என அந்நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், எரிகாவிற்கு ஆதரவாக பெண்ணுரிமைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், "பாகிஸ்தான் அரசாங்கம் எந்த பெண்ணையும் நாட்டின் சார்பாக அழகி போட்டிக்கு அனுப்பவில்லை. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்பவர்களை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கருத முடியாது," என இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் முர்டாசா சோலங்கி கூறினார்.

    ×