search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை நகராட்சி"

    • இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர்.
    • சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணைப்பு சாலை சந்திப்பில் தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்தும் வருகின்றது. அவற்றை புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், ஒரு சில சேதமடைந்த பாலங்கள் மாதக்கணக்கில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நகராட்சி பூங்காவுக்கு அருகே உள்ள ராஜேந்திர ரோடு சந்திப்பில் தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. அதை சீரமைப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சேதம் அடைந்த பகுதியை தடுப்பு வைத்து மறைத்து உள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ராஜேந்திரா ரோடு சந்திப்பில் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    உடுமலை:

    கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உடுமலை நகராட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உடுமலை நகராட்சியில் மனிதக்கழிவுகள் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லும் வகையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படுகிறது.

    எனவே கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் குறித்து உடுமலை நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் கொட்ட கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் .உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்

    உடுமலை:

    உடுமலை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கு உடுமலை கிராம 4 வது எண் 68.69/1 ல் உள்ள 4. 81 ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு அல்லாத வணிக நோக்கத்திற்காக மட்டும் காலி நிலமாக 21/2 சென்ட் 5 சென்ட் 10, 15 சென்ட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் பரப்பளவுக்கு ஏற்ப சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலை உள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கு அருகில் உள்ள காலியிடத்தை முழுவதுமாக வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.முன்பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தற்போது செலுத்தப்படும் பணம் முன்பணம் மட்டுமே. வடிவமைப்பிற்கு பிறகு சதுர அடிக்காக நிலவாடகை உரிய விதிகளின்படியும் அரசாணை படியும் தொகை செலுத்திய பிறகு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பழனி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கடையில் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளுக்கு முன் ஏலம் நடைபெற உள்ளது .இதற்கும் விருப்பம் உள்ளவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    • வேலுச்சாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    உடுமலை :

    உடுமலை தி.மு.க. நகர செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் சி. வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    உடுமலை நகரச் செயலாளராக பொறுப்பேற்ற வேலுச்சாமிக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சே. செல்வராஜ், சொர்க்கம் பழனிச்சாமி, உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், முன்னாள் அமைப்பாளர் குமார்சந்திரன், ஆர். டி. எஸ். தனபால், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி, ரீகன், சாந்தி கிருபாகரன் உள்ளிட்டோர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது.
    • வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரித்து செல்லப்படுகிறது. அத்துடன் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு மூலமாக கூட்டி சுத்தம் செய்து வருகின்றனர்.

    சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது. இதன் விலை ரூ.24 லட்சம் ஆகும். இந்த வாகனம் சாலையில் செல்லும் போது அதில் உள்ள எந்திரத்தை இயக்கினால் எந்திரத்தின் முன்பகுதியில் உள்ள சீமாறு போன்ற எந்திரம், சாலைப்பகுதியில் உள்ள குப்பை தூசிகளை சேகரித்து கொடுக்கும். இதை வாகனத்தில் உள்ள எந்திரம் உள் இழுத்து கொள்ளும். சாலைகளின் நடுவில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மையத்தடுப்புகளை ஒட்டி கீழ்பகுதியில் மண் சேர்ந்திருக்கும். அந்த மண், தூசியையும் இந்த எந்திரம் இழுத்து வந்து விடும்.

    இந்த எந்திரத்தில் உள்ள டேங்கில் மண், தூசி போன்றவை சேர்ந்ததும், அதை வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம். இந்த நவீன எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த வாகனத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து, வாகனத்தை விற்பனை செய்துள்ள நிறுவனத்தினர், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். அதன் பிறகு இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. 

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
    • நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    பேரணிக்கு உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி மாணிக்கம் வீதி வித்யாசாகர் கல்லூரி ராஜேந்திரா சாலை வழியாக நுண்ணுயிர் உரக்கிடங்கை அடைந்தது. அங்கு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் நகர் அலுவலர் கௌரி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ஆறுமுகம், ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், சேற்றில் வழுக்கி விழும் ஆபத்தான நிலையில் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி சந்தையில் சுற்றுப்புற பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் லாரிகள் வாயிலாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
     
    மேலும் 300க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மளிகை கடைகளுடன் தினசரி சந்தை செயல் படுகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் குட்டை போல் தேங்கி உள்ளதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

    வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், சேற்றில் வழுக்கி விழும் ஆபத்தான நிலையில் நடந்து செல்லும் அவல நிலை காணப்படுகிறது. மேலும் வீணாகும் காய்கறி கழிவுகளை வளாகத்திற்குள் கொட்டப்பட்டு பல மாதமாக அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

    அத்தோடு நிரந்தர கட்டடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் கடைகள் அமைக்கப்படுகிறது. மழையில் நனைந்து கொண்டே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே சந்தை வளாகத்திற்குள் மழைநீர் வடிகால் வசதி செய்யவும், சேறும் சகதியுமாக மாறிய ரோட்டை சரிசெய்யுவும், துர்நாற்றம் சுகாதாரகேடு ஏற்படுத்தி வரும் காய்கறி கழிவுகளை அகற்ற வேண்டும்.

    சந்தை வளாகத்தில் நிரந்தர கடைகள் அமைக்க காங்கிரீட் தளம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ×