search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரத்தம்"

    இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும்.
    சில மாதங்களுக்கு முன்னர், சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளவரின் இரத்தம் செலுத்தப்பட்டு அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்து இரண்டு மாதம் ஆன அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று முற்றிலும் இல்லை என்ற அதிகாரபூர்வமான அறிக்கை நமக்கு ஆறுதலும், நிம்மதியும் தருகிறது. என்றாலும் கடந்த மூன்று மாதங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் எச்.ஐ.வி. தொற்று இல்லாத இரத்தம் ஏற்றப்பட்டு 20 கர்ப்பிணி பெண்கள் இறந்து போய் இருக்கிறார்கள் என்ற தகவல் மீண்டும் நமக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. துறை ரீதியான நடவடிக்கைகள் மருத்துவர்கள் மற்றும் 12 மருத்துவ ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், நமக்கு ஏற்புடையதாக இல்லை.

    பொதுவாக ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்பு மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வர். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் 10 நிமிடத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் குளிர், நடுக்கம் ஏற்பட்டால் உடனே இரத்தம் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஒவ்வாமைக்கான மருந்துகளை கொடுக்க வேண்டும். இதில் பாதிப்புகளை தடுத்து விடமுடியும். இரத்தம் செலுத்தப்பட்டவுடன் 30 நிமிடத்துக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

    அந்த நபரின் சிறுநீரை சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும். அதில் இரத்தம் கலந்து வந்தால் கோளாறாகி விடும். 24 மணி நேரம் கடந்தவுடன் மீண்டும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பிரச்சினை இல்லை என்றால் ஆபத்து இல்லை. இரத்தம் ஏற்றும்போது செவிலியர்கள் அருகில் இருந்து கவனிக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இரத்தம் செலுத்தியவர்கள் இந்த முறைகளை சரியாக பின்பற்றாமல் கவனக்குறைவாக செயல்பட்டு இருந்ததாலோ அல்லது காலாவதியான இரத்தத்தை செலுத்தியதாலோ 20 கர்ப்பிணி பெண்கள் இறந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேர்ந்துள்ளது.

    ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக இரத்தம் இழக்கும் போது அவரைக் காப்பாற்ற இன்னொருவர் தானம் செய்த இரத்தமே தேவைப்படுகிறது. பெரிய அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படக்கூடிய இரத்த இழப்பிற்கு ஈடு செய்ய தானம் செய்யப்பட்ட இரத்தமே தேவைப்படுகிறது. சாதாரண பிரசவம் ஆன சில பெண்களுக்கு உதிரம் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது, அந்த பெண் இறக்காமல் இருக்க இரத்தமே தேவைப்படுகிறது. அதிகப்படியான இரத்த சோகை, ஹூமோபிலியா என்ற இரத்த போக்கு நோய், பெரிய தீக்காயங்கள் உள்ளவர்களுக்கும் இரத்தம் செலுத்துவதே உயிர் காக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

    இவற்றையெல்லாம் பார்க்கும் போது மனித இரத்தம் உயிர் காக்கும் மா மருந்தாகவே தெரிகிறது. இதனால் தான் இரத்தம் ஒரு மருந்தாக அறிவிக்கப்பட்டு, இரத்த வங்கிகள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் பல நடந்து வந்தாலும் செயற்கை முறையில் அங்கீகரிக்கப்பட்ட இரத்தம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்று மனித கொடையாளிகளை நம்பியே இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் 2015-ன் கணக்கின்படி 304 இரத்த வங்கிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 264 இரத்த வங்கிகளே செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 94 இரத்த வங்கிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் உதவி பெற்று செயல்படுகின்றன. மீதமுள்ள 170 இரத்த வங்கிகள் (நாக்கோ) உதவியின்றி பெரும்பாலும் தனியார் மூலம் நடைபெற்று வருகின்றன. 76.4 சதவீத இரத்த வங்கிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்தன. மீதம் உள்ளவை தனியார் இரத்த வங்கிகளாக உள்ளன.

    இவற்றில் 108 இரத்த வங்கிகள் (41 சதவீதம்) சென்னை, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் அமைந்துள்ளன. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 3.7 சதவீத இரத்த வங்கிகள் என்ற மாநில சராசரிக்கு குறைவாக தர்மபுரி (2 சதவீதம்) கிருஷ்ணகிரி் (2.7 சதவீதம்) ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ளன. 104 இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்தக்கூறுகள் பிரித்து எடுக்கும் வசதி உள்ளன.

    அனைத்து இரத்த வங்கிகளுமே அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 38.4 சதவீதம் இரத்த வங்கிகள் மட்டுமே 2015-ம் ஆண்டு நிலவரப்படி நிலுவையில் உள்ள அனுமதியைப் பெற்றிருந்தன. மீதம் உள்ளவை அனுமதி புதுப்பிக்கப்படுவதற்காக விண்ணப்பித்து இருந்தன. இவைகளை நேரில் சென்று பார்வையிட்டு எத்தனை பேருக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 2015-ம் ஆண்டு கணக்கின்படி சேகரிக்கப்பட்ட இரத்த யூனிட் எண்ணிக்கை 8,44,908. இவற்றில் 93.1 சதவீதம் தன்னார்வ இரத்த கொடையாளிகள் மூலம் பெறப்பட்டன. மீதமுள்ளவை நோயாளிகளின் உறவினர் நண்பர்கள் மூலம் பெறப்பட்டன.

    சராசரியாக ஒவ்வொரு இரத்த வங்கியும் ஆண்டுக்கு 3500 யூனிட் இரத்தம் சேகரித்து, பராமரித்து தேவையுள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த அனைத்து செயல் முறைக்கும் பிஇரத்தியேகமான தேசிய வங்கிகள் வழிகாட்டுதல் உள்ளது. அனைத்து வங்கிகளும், ஒவ்வொரு முறையும் இவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு இரத்த வங்கியும் இரத்த யூனிட்டுகளை சேமித்து வைக்க பிஇரத்தியேகமான இரத்த வங்கி ரெப்ரிஜீரேட்டர்களை வைத்திருக்க வேண்டும். தடையில்லாத தொடர் மின்சாரம் கிடைத்திட பிஇரத்தியேக ஜெனரேட்டரை வைத்திருக்க வேண்டும்.

    இரத்தம் ஒரு மருந்து என்பதால், மற்ற மருந்துகளைப் போல காலாவதி தேதி என்ற ஒன்று இரத்தத்திற்கும் உண்டு. 2 டிகிரி முதல் 6 டிகிரிவரை பாதுகாக்கப்படும் சாகம் என்ற திரவத்துடன் கலக்கப்பட்ட முழு இரத்தம், சிவப்பணு கூறு இரத்தம் ஆகியவை 42 நாட்கள் வரை வைத்திருக்கலாம். இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா என்ற திரவம் (மைனஸ் 30 டிகிரி) 1 ஆண்டு வரை வைத்திருக்கலாம். வெளியே எடுத்த உடன் “தாயிங்க்” உஷ்ணமேற்றுதல் முறைப்படி குறிப்பிட்ட அளவு சூடேற்றி 30 நிமிடத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும். 1 மணி முதல் 4 மணிக்குள் மருத்துவ கண்காணிப்புடன் நரம்பின் வழியாக செலுத்திவிட வேண்டும். கெட்டுபோன இரத்தம் பார்த்தாலே தெரியும்படி இருக்கும். திரி, திரியாக தெரிந்தாலே அதனை உபயோகிக்கக்கூடாது.

    இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும். சரியாக செயல்படுத்தப்பட்டால் இரத்தம் ஏற்றுதல் ஆபத்தில்லாத ஒரு எளிதான முறை. பலருக்கு உயிர்காக்கும் சிறந்த மருந்தாக இரத்தம் இருந்து வருகிறது. சரியான இரத்தம், சரியான நேஇரத்தில், சரியான முறையில், சரியான நபருக்கு செலுத்தப்பட்டால் நன்மைகள் கோடியளவு கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட செயற்கை இரத்தம் வரும்வரை, மனித இரத்த இழப்பிற்கு மற்றொரு கொடையாளியின் இரத்தமே ஈடுசெய்யும்.

    கனிவுடனும், கவனமுடனும் செயல்படுவோம். உயிர்களைக் காப்போம்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,

    முன்னாள் துணை இயக்குனர்,

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்.

    நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஹீமோகுளோபின் என்பது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகை புரதம் ஆகும். இதில் இருப்பு சத்து அதிகம் இருக்கும். நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

    நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும்.



    இதில் அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.

    ஹீமோகுளோபின் குறைய காரணம்:

    சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும்.

    பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
    இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. இதில் சிறு கவனக்குறைவு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. சிறு கவனகுறைவு ஏற்பட்டால் கூட அந்த இரத்தம் உயிரையும் எடுக்கும் என்பதற்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்திய விவகாரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது வயற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க மருத்துவ உலகம் போராடுகிறது. இரத்ததானம் செய்த வாலிபரோ ஏற்கனவே 2016-லும் இரத்ததானம் செய்து இருக்கிறார். அப்போதே அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கி இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்கள். இதுபற்றி அவருக்கு ஆலோசனைகள் வழங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    நோய் தொற்று இருப்பது தெரியாமல் தற்போது அவரது அண்ணிக்கு இரத்தம் கொடுக்க வந்த போதும் அவரது இரத்தத்தை எடுத்து இருக்கிறார்கள். எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரியாமலே அந்த இரத்தத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இரத்தத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், எச்.ஐ.வி. தாக்கியவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவரிடம் இரத்தம் எடுத்தது எப்படி?

    சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கு எச்.ஐ.வி. இருப்பதை அறிந்து நேரடியாக வந்து விபரத்தை சொல்லி தனது இரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாதீர்கள் என்று சொல்லி இருக்காவிட்டால்...? இரத்தம் கொடுப்பதும், ஏற்றுவதும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் ஒருவரது உடலில் இருந்து அப்படியே மற்றொருவர் உடலுக்கு செலுத்திவிட முடியாது.

    உயிர்காக்கும் இரத்தம் எடுப்பது, சேமிப்பது, பகுப்பாய்வு செய்வது எல்லாம் அவ்வளவு சுலபமானதா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்து சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர். அரசோ, தனியாரோ இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி தொடங்க அனுமதி பெறுவது கூட சாதாரண விஷயமல்ல. அதற்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

    தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னிஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே முடியும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேரடியாக ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மருந்து கட்டுப்பாட்டு கழகத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

    இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு கழகம் சோதனையை தொடங்கும். அவர்களும் முழு திருப்தி அடைந்தால் மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். இதையடுத்து மத்திய அரசு துறையும் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகே லைசென்சு வழங்கப்படும். அறையின் அளவு குறைந்தாலோ அல்லது ஏ.சி.யின் அளவு குறைந்தால்கூட அனுமதி கொடுக்க மாட்டார்கள். அந்த அளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

    சரி, ஆய்வகம், இரத்த வங்கி தொடங்கியாச்சு. இஷ்டம் போல் இரத்தம் எடுத்துவிட முடியுமா? அதற்கும் கட்டுப்பாடுகள் அதிகம்! இரத்தம் கொடுப்பதால் எந்த ஆபத்தும் வராது. அப்படியிருந்தும் இரத்தம் கொடுக்க பலர் முன்வருவதில்லை. எனவே இரத்த தானம் செய்ய வருபவர்களை வரவேற்று எல்லோரிடமும் 350 மி.லி. இரத்தம் எடுத்து விடுவார்கள். இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் எச்.பி. அளவு மற்றும் இரத்ததானம் செய்பவரின் உடல் எடையை மட்டும் பார்த்து எடுப்பார்கள்.

    பின்னர் அந்த இரத்தத்தின் மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா? என்பது பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும். அதன் பிறகு தான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிப்பு செய்யப்படும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.



    இந்த பரிசோதனையின் போது ஏதாவது இரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது தெரிய வந்தால் உடனே அந்த இரத்தம் அழிக்கப்படும். அதோடு அந்த இரத்தத்தை கொடுத்தவர் பற்றிய விபரம் நம்பிக்கை மையத்துக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நபரை உடனே அணுக வேண்டும். அவரை வரவழைத்து நம்பிக்கை மையத்தினர் அவரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள். அது மிகவும் துல்லியமான பரிசோதனை. அந்த பரிசோதனையில் தான் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

    உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்படும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    100 பேரிடம் இரத்தம் எடுத்தால் குறைந்தது 10 பேருக்காவது எச்.ஐ.வி. இருப்பதற்கான அறிகுறி தென்படுவதுண்டு. ஆனால் நம்பிக்கை மையத்தின் துல்லிய ஆய்வில் அதில் பலருக்கு இல்லாமல் கூட இருக்கும் என்கிறார்கள். இரத்தம் 36 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் வரிசைப்படி இரத்தத்தை பயன்படுத்துவார்கள்.

    இரத்த வங்கியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனே செலுத்திவிட முடியாது. இரத்தம் தேவைப்படுபவரின் இரத்தமும் செலுத்த வேண்டிய இரத்தமும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இரு இரத்தமும் ஒரே பிரிவு இரத்தம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இரத்த சோதனை மற்றும் இரத்த வங்கிகள் கண்காணிப்புக்காக நோடல் அதிகாரியாக ஒரு மருத்துவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவும் இருந்தும் தான் இப்படி....! எப்படி இருக்கு?

    அடையாளம் காணவேண்டும்

    ஒருவருக்கு இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நம்பிக்கை மையத்தினர் தொடர்பு கொண்டு அழைக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் எங்காவது சென்று விடுவதுண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பதும், அவர்களால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும் வழியில்லை என்பது பலரது கருத்து.

    இதை தடுக்க குருதி கொடையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள். இந்த முறையை அமல்படுத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதையாவது தடுக்கலாம் என்கிறார்கள்.
    சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.
    உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிரை பறிக்கும் பிரச்சினை. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய் ஆகும்.

    உடலுக்குள் ரத்த குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினை தான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.

    பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்த நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்த நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்த நோய் உள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

    இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமோசோம் களாகவும், பெண்கள் உடலில் xx குரோமோசோம்களாகவும் இருக்கும். x குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே இந்த நோய்க்கு முதன்மை காரணம். ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க முடியாது.



    இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு x உள்ள மரபு பண்புகளைக் கொண்டு ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் பெண் என்பதால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது.

    அவருக்கு வந்ததோ மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக இருந்தார். இதனால் இது அரச நோய் என்ற பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

    ரத்த உறவில் திருமணம் செய்வதால் தான் இந்த நோய் அதிகம் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் மூலமே பரவுகிறது. மரபணு காரணமாவதால் இந்த நோய்க்குத் தீர்வு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
    இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    சீரான ரத்த ஓட்டம் உடலியக்கத்திற்கு மிக அவசியம். சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது.

    அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது. நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகள்!

    * உடலில் உள்ள நச்சுக் களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப் பானாக பிராக்கோலி விளங் குகிறது. இது காய்கறி வகையை சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக் களை நீக்கவும் பிராக் கோலி உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப் பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

    * தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுதாதயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

    * ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

    * கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

    * பீட்ரூட் சாறு இயற்கை யாகவே உடலில் நச்சுத் தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டா கவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

    * சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. இதில் இரும்பு சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக பராமரிக்கவும், ரத்தத்தை தூய்மைப் படுத்தவும் வெல்லம் உதவுகிறது.

    * குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளி யேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

    * முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். 
    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×