search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்மானுவேல் மேக்ரான்"

    • சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
    • நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை (பாக்சிங்) செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது.

    சமீப காலமாக மேக்ரான் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை
    • பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு

    ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி 16 மாதங்கள் கடந்து விட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்போடு உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பல்வேறு ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் பின்னணியில் ராணுவ தளவாடங்கள், அணுஆயுதங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் பிரயோகம் போன்ற விஷயங்களில் உலக நாடுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து பல நாடுகள் சிந்திக்க தொடங்கி விட்டன. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தங்கள் நாடுகளை முன்னிறுத்தி திட்டங்களை வகுக்க தொடங்கி அவற்றிற்கு ஆதரவும் தேடத் தொடங்கியுள்ளன.

    விமானம் மற்றும் விண்வெளித்துறையை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிகழ்வான பாரிஸ் ஏர் ஷோவின் துணை நிகழ்ச்சியாக ஒரு நாள் கூட்டம் ஒன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பிரான்ஸ் அமைப்பாளர்கள், ஏவுகணை எதிர்தாக்குதல் மற்றும் டிரோன் எதிர்தாக்குதல் மற்றும் அணுஆயுதங்களைத் தடுப்பது ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இருந்தது என்றும் உக்ரைனில் மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பு அத்தகைய உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் செயல்திறனின் அவசியத்தை எடுத்து காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

    20 ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை ஒன்று திரட்டி பாரிசில் ஒரு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற நாடுகளில் ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் சுவீடன் நாடுகளுடன் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகியவையும் அடங்கும். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    இங்கு பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரான் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய நிறைவு உரையிலிருந்து சில முக்கிய கருத்துக்கள்:-

    ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை. பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு. ஐரோப்பியர்கள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு உத்தியை உருவாக்க வேண்டும். நமக்கு இருக்கும் அச்சுறுத்தல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஐரோப்பியர்களாகிய நாம் எதை உருவாக்க முடியும், நாம் என்ன வாங்க வேண்டும் எனவும் சிந்திக்க வேண்டும்.

    அலமாரிகளில் (விற்பனைக்கு) என்ன இருக்கிறதோ உடனடியாக அதை வாங்குவது தவறு. ஐரோப்பிய பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் சுயாதீன ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய தரம் மிக முக்கியம். அமெரிக்கர்களிடமிருந்து நாம் அதிகமாக வாங்க வேண்டியிருப்பதற்கு காரணம், அவர்கள் தரத்தை மிகவும் மேம்படுத்தியிருக்கிறார்கள், மேலும் அவர்களே தங்கள் உற்பத்தியாளர்களுக்கு மானியங்களை வழங்கும் ஃபெடரல் ஏஜென்சிகளை வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனி மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய வான் பாதுகாப்பு திறன்களுக்கான திட்டங்களை வகுத்து வந்தாலும், பிரான்ஸ் அவற்றை வெளிப்படையாக விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட, ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் எனப்படும் திட்டம், இங்கிலாந்து உட்பட 17 ஐரோப்பிய நாடுகளால் ஆனது. ஆனால் பிரான்ஸ் இதில் பங்கு பெறவில்லை. இது நேட்டோவின் வான்வெளி மற்றும் ராணுவ பாதுகாப்பு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என தெரிகிறது.

    பெர்லினில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் முன்முயற்சியுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், கப்பலில் இருந்து ஏவும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிரான பாதுகாப்பை கூட்டாக அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கிறோம்" என்று கூறினார்.

    இந்த திட்டம் "இஸ்ரேலிய ஆரோ 3" அமைப்பை முன்னிறுத்தி தற்போதுள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளால் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தன்னுடைய இந்த முன்முயற்சிக்கு பிரான்ஸ் எழுப்பியுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஜெர்பன் அதிபர் ஷால்ஸ் எதுவும் பதிலளிக்கவில்லை.

    ரஷிய- உக்ரைன் போருக்கு பிறகு பெர்லின் ராணுவ செலவினங்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அறிவிக்கும் வரையில், "பாதுகாப்பு" என்பது இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஜெர்மனி இவ்விஷயத்தில் போதுமான அளவு செயல்படவில்லை என்று பிரான்ஸ் குற்றஞ்சாட்டி வந்தது.

    மேக்ரான், "பிரான்ஸ் மற்றும் இத்தாலி இணைந்து உருவாக்கிய 'மாம்பா எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு' இப்போது உக்ரைனில் பயன்படுத்தப்பட்டு, முக்கிய நிறுவல்கள் மூலம் பல உயிர்களை பாதுகாக்கிறது என்றும் பாரிஸ் மற்றும் ரோம் மூலம் உக்ரைனுக்கு விநியோகம் செய்யப்பட்டது" என்றும் கூறினார். மாம்பா அமைப்பு நேட்டோவின் ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் வளர்ந்து வரும் அனுபவத்தின் உதவியுடன் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. இது உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், இவ்விஷயத்தில் ரஷியா ஒரு முதன்மை நிலை அடைவதைத் தடுக்கிறது.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுபற்றி மேக்ரான் கூறுகையில், அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார்.

    மேலும் வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானும், பிரதமர் மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்
    • உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காணமுடியும் என்றார் பிரான்ஸ் அதிபர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம்.

    உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.

    ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும். ஏர்பஸ் மற்றும் சப்ரான் உள்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.

    இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    • ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.

    லுசைல்:

    கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். 

    • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
    • இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

    பாரிஸ்:

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

    இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • போரை முடிவுக்கு கொண்டு வர புதினை சந்திக்க தயார் என ஜோ பைடன் தகவல்.
    • அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க முடிவு.

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மேக்ரனை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை. அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    'பின்னர் பேசிய மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது.

    மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.

    இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது. அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 

    • இருநாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும்.
    • பிரான்ஸ் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும் என்று நீங்கள் நம்பலாம்.

    இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கும் இடையே செழித்து வரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.

    அண்மையில் குஜராத் மற்றும் டெல்லிக்கு வந்திருந்தபோது, நம் நாடுகளுக்கு இடையே செழித்து வளரும் உறவு பாலத்தை நேரில் பார்த்தேன், இருநாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


    ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவரையும் வாழ்த்துகிறேன், அனைத்து ஆஸ்திரேலியர்களும் இந்தியாவின் வெற்றிகளைப் பாராட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    கலாச்சாரம் மற்றும் நாடுகளுக்கு இடையோன தொடர்புகளின் வெற்றிக்கு இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அன்புள்ள நண்பர் நரேந்திர மோடி மற்றும் அன்பான இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் பிரமிக்க வைக்கும் சாதனைகளை நீங்கள் பெருமையுடன் கொண்டாடுகிறீர்கள், பிரான்ஸ் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும் என்று நீங்கள் நம்பலாம் என்றும் தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ×