search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுபொருட்கள்"

    • பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி ஒரத்தநாடு தாலுகா புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வேலாயுதம் தலைமை தாங்கி, திருந்திய நெல் சாகுபடி உத்திகள் ,நீர் மேலாண்மை மற்றும் களை மேலாண்மை குறித்து விளக்கி பேசினார். உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மாரிமுத்து, உர நிர்வாகம், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி விளக்கினார். பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராமமூர்த்தி, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா, தொழில்நுட்ப உதவியாளர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.
    • உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுக்கா, சித்தமல்லி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 ஆண்டிற்கான கிராம வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன் சம்பா சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் நுண்ணுட்ட சத்துக்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் உயிர் உரங்கள் பயன்பாடு அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்து கூறினார்.

    முதலில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானிய விபரங்கள் இடுபொ ருள்கள் இருப்பு போன்ற தகவல்களை வேளாண்மை உதவி அலுவலர் பாபு விளக்கினார்.

    மேலும் மழைக் காலங்களில் நெல் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல், நோய்கட்டுப்பாடு போன்றவற்றை பற்றியும் பசுமை போர்வை திட்டத்தில் எப்படி பதிவு செய்து கொள்வது மேலும் உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்தும் இடுபொருள்கள் முன்பதிவு எப்படி செய்வது போன்ற விபரங்களும், வானிலை அறிக்கையை தெரிந்து கொள்வது போன்றவற்றை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஆத்மா திட்ட உதவி மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தி ல் வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் அட்மா, மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் 2023-24 செயல்விள க்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சாக்கோ ட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்கள், 5 பயனாளிகளுக்கு தார்பா ய்கள், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள், 1 பயனாளிக்கு பருத்தி கருவி ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி தொழில்நுட்ப மேலாள ர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோட்டில் நடப்பு பருவத்திற்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அர க்கன்கோட்டை பாசனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. காலிங்க ராயன் பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த மாதம் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தவிர மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசனத்திற்கு அட்டவணைப்படி அடுத்த மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதையடுத்து இடு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- விவசாயிகளுக்கு நடப்பாண்டிற்கு தேவையான இடு பொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல் விதைகள் 147.48 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 18. 35 மெட்ரிக் டன், பயறுவகைகள் 2 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதேபோல ரசாயண உரங்களான யூரியா 4121 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 3790, பொட்டாஷ் 3436, காம்ப்ளக்ஸ் 11729 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பு அன்பழகன் வரவேற்றார்.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் சித்ரா மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பு அன்பழகன் அனைவரையும் வரவேற்றார்.

    மாநில அயலக அணி தி.மு.க. துணை அமைப்பாளர் விஜயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜய் பிரசாத், ஒன்றிய கவுன்சிலர்கள் ஹாஜா மைதீன், ஆனந்த், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கண்ணையன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வினோத், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், திட்டக்குழு உறுப்பினருமான தாமரைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விலையில்லா ரசாயன உரங்கள் வழங்கு வதற்கான படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இதில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களான பெருங்குறிச்சி, திடுமல், தி.கவுண்டம்பாளையம் மற்றும் கோப்பணம்பளையம் ஆகிய கிராமங்களில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.

    திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், ஒரு ஹெக்டர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்திட வேண்டும். ஏற்கனவே ஆடுகள் வைத்தி ருப்பவராக இருக்கக்கூடாது. திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருத்தல் கூடாது. ஆதி திராவிடர், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலவுடைமை ஆவணங்க ளான சிட்டா, அடங்கல், ஆதார் எண் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 ஆகியவற்று டன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • காரைக்குடியில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பண்ணைக்கருவிகள் கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவை யான நிலங்களில் தடுப்ப ணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளான வேளாண் இடு பொருட்கள், பண்ணைக்கருவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விவசாயி களுக்கு பயனுள்ள வகை யில் உழவர் இதழையும் கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    • திருபுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் விதைச்சான்று அலுவலர் பிரபு, உதவி விதை அலுவலர் அழகு சேகர், சாலியமங்களம் உதவி வேளாண்மை அலுவலர் ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இதில் திருபுவனம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்

    • மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
    • தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டா ரத்தில் மேலவளவு மற்றும் கேசம்பட்டி, கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் வழங்கினார்.

    வேளாண்மை துறை சார்பாக 50 சதவீதம் மானியத்தில் தார்பாலின், பண்ணை கருவிகள், நேரடி நெல் விதைக்கும் கருவி மற்றும் தென்னை நடவு, மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.

    பின்னர் தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் ராணி, வேளாண்மை உதவி இயக்குநர் சுபாசாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், துணை வேளாண்மை அலுவலர் தனசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி தோட்டக்கலை அலுவலர் அப்துல் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 53 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
    • 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலை வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாதம், மாதம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நட த்தப்படுகிறது. இம்முகாம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கண்காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை த்துறையின் மூலம் செயல்படு த்தப்படும் திட்டங்கள் பற்றி செயலி அறிமுக ப்படுத்த ப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்ச ரின் உயரிய நோக்கம் அனைவ ருக்கு ம் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான். முதலமைச்சர் பொறுப்பே ற்றவுடன் 4 முறை நடத்த ப்பட்ட கிராம சபைக்கூட்டம் தற்போது 6 முறையாக மாற்றி நடத்தப்படு கிறது. கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கின்ற வரவு, செலவு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்க ளுக்கு ஏற்படும் சந்தே கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டு, அதில் நேற்று 53 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 72 மனுக்கள் பரிசீலனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், ஆதிதி ராவிடர்நலத்துறை யின் சார்பில் 9 பயனாளி களுக்கு பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்க ப்பட்டன.

    இதில் வேளா ண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சமூக நலத்துறை தாசில்தார் சுந்தரி, சீர்காழி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனை த்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி வழங்கல்.
    • வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காட்டில் ரூ.38 லட்சம் செலவில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் உஷாநந்தினிபிரபாகரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவைத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்று பேசினார்.

    எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய வேளாண்மை விரி வாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து விவசாயி களுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள், அரிவாள், மம்பட்டி, பாறை வழங்கி பேசினர்.

    விழாவில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜிஎன்.ரவி மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், துணை வேளாண்மை அலுவலர்கள் ரவிச்சந்திரன், வேதை ராஜன், அலெக்சாண்டர், விஜய்அமிர்தராஜ், விதை அலுவலர் அசோக், கிடங்கு மேலாளர்கள் சரவணன், ரம்யா, வெங்கடேசன் மன்சூர் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    இதேபோல் காரை மேடு பகுதியில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை கட்டிடத்தையும், கொள்ளிடம் வடகால் பகுதியில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வேளாண் மையக் கட்டிடங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தலா ரூ. 2ஆயிரம் மதிப்பில் 25 விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் விதை மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை துறை (தினை பயிர்) உதவி பேராசிரியர் கதிர்வேலன் வரவேற்றார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் மற்றும் இடுபொருட்களை வழங்கி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவருமான ஜி.கே. நாகராஜ் பேசுகையில்,விவசாயத்தில் பயிர் அறுவடைக்கு முன்பு நல்ல விலையில் விற்கும் விளை பொருட்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது விலை சரிவை சந்திக்கின்றன. அதற்கு காரணம் எந்த விளை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அதனையே அனைத்து விவசாயிகளும் பயிரிடுவதால் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனை சீரமைத்து அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இனி விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும். வேளாண்மை துறை வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டின் அன்னிய செலவாணியை நாம் சமையல் எண்ணொய், பெட்ரோல், டீசல் போன்றவை இறக்குமதிக்கு தான் அதிக அளவில் செலவிடுகிறோம். அதனை தவிர்க்க உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல், மாநில விவசாய அணி செயலாளர் மவுனகுருசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×