search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

    • பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி ஒரத்தநாடு தாலுகா புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வேலாயுதம் தலைமை தாங்கி, திருந்திய நெல் சாகுபடி உத்திகள் ,நீர் மேலாண்மை மற்றும் களை மேலாண்மை குறித்து விளக்கி பேசினார். உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மாரிமுத்து, உர நிர்வாகம், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி விளக்கினார். பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராமமூர்த்தி, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா, தொழில்நுட்ப உதவியாளர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா நன்றி கூறினார்.

    Next Story
    ×