search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விரைவு பஸ்"

    • அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.
    • பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.

    இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன. இதில் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நடைமேடை எண் 1:-கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார் தாண்டம்.

    நடைமேடை எண் 2:-உடன்குடி, கருங்கல், குட்டம், கன்னியாகுமரி, குலசேரகம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

    நடைமேடை எண் 3:-ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன், ஒப்பிலன்.

    நடைமேடை எண் 4:-கம்பம், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, பட்டுக்கோட்டை, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, மன்னார்குடி.

    நடைமேடை எண் 5:-அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி, கும்பகோணம்.

    நடைமேடை எண் 6:- ஈரோடு, ஊட்டி, எர்ணாகுளம், கரூர், குருவாயூர், கோவை, சேலம், திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம்.

    நடைமேடை எண் 7:-செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி.

    நடைமேடை எண் 8:-அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், விழுப்புரம், ஜெயங்கொண்டம்.

    நடைமேடை எண் 9:-கடலூர், காட்டுமன்னார் கோல், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, புதுச்சேரி, வடலூர், விருத்தாசலம்.

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
    • பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.


    மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

    விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

    இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

    வருகிற 28-ந்தேதியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர். அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வசதி இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    அரசு பஸ்களிலும் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். மே மாதத்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை நாட்களான வருகிற 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருப்பதால் பிற போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இன்னும் 1½ மாதத்திற்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதக்கூடும். அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், 'முன்பதிவு அதிகரித்ததால் பிற போக்குவரத்து கழகத்தின் மூலம் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். அதனால் முன்பதிவை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

    • கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பார்சல் மற்றும் கூரியர் குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கான பார்சல் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்துக்கான பார்சல் முன்பதிவு மையம் கோவையில் செயல்படுகிறது. கோவையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கும் விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 தாலுகா உள்ளது. பல்லடம், காங்கயம், அவிநாசி, தாராபுரத்துக்கு அதிக அளவில் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் மாவட்டத்தில் எந்த பஸ் நிலையத்திலும் விரைவு பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் இல்லை. டிக்கெட் முன்பதிவு செய்யவும் வழியில்லை.

    பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து விடுகின்றனர். தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு வர்த்தக நகரான திருப்பூரில்எஸ்.இ.டி.சி., பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் உடனடியாக துவங்க வேண்டும்.

    பார்சல் குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்ய வழியில்லாதது குறித்து, கோவை கோட்ட எஸ்.இ.டி.சி., அதிகாரிகளிடம் கேட்ட போது, பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணுக்கு அழைத்தால் கிலோ எவ்வளவு, கோவையில் இருந்து எப்போது எந்தெந்த பகுதிக்கு பார்சல்களை அனுப்ப முடியும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் என்றனர்.

    • அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது.
    • பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம்.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

    தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. முதலில் பஸ் டெப்போவில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் எளிதாக புக்கிங் செய்யும் வகையில் பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது.

    விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த செலவில் அரசு விரைவு பஸ்களில் பார்சல் அனுப்பி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் அதிகளவு பார்சலில் செல்கின்றன. ஆரம்பத்தில் தினமும் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

    அரசு விரைவு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்புதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் படிப்படியாக பார்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பார்சல் அனுப்புகிறார்கள்.

    குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. சேலத்தில் இருந்து பன்னீர் பார்சல் அதிகமாக செல்கின்றன. பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம்.

    பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும் விரைவாக பொருட்களை அனுப்பும் வசதி இருப்பதால் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடன்குடியில் இருந்து நெல்லை வழியாக ஈரோட்டிற்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்து சேவை எந்தமுன்னறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது.
    • ஈரோடு செல்பவர்கள் தனியார் பேருந்திலோ, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஈரோடு செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    சாத்தான்குளம்:

    உடன்குடியில் இருந்து சாத்தான்குளம், நாசரேத், நெல்லை வழியாக ஈரோட்டிற்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா அவசர காலத்தில் இந்த பேருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. பின்னர் கடந்த 9மாதங்களுக்கு பின் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எந்தமுன்னறிவிப்பு இன்றி ஈரோடு விரைவு பேருந்து சேவை திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் ஈரோடு செல்பவர்கள் தனியார் பேருந்திலோ, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஈரோடு செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஆதலால் மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு உடன்குடியில் இருந்து சாத்தான்குளம் வழியாக ஈரோட்டிற்கு அரசு விரைவு பேருந்து சேவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வேணுகோபால் மற்றும் கிராம மக்கள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×