search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandhe bharath"

    • மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரெயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலின் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி- காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை- காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5வது சேவையாக சென்னை- பெங்களூரு- மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மேற்கு வங்காள அமைச்சர் உதயன் குஹா கூறியுள்ளார்.

    மேலும் அவர், "சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிவேக ரெயிலாக இருந்தால், ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு 8 மணிநேரம் ஆகும். சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம்" என்றார்.

    • தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.

    அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் பீகார் மக்களுக்கு புகார் இருக்கும். இருப்பினும் பீகாரை அவமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சியில், அவர்களுக்கு இந்த சேவைகளை மறுக்க முடியாது.

    வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
    • நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    மராட்டிய மாநிலத்தின் 2-வது தலைநகரமான நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.

    விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாக்பூர் மெட்ரோவின் ஃப்ரீடம் பார்க் நிலையத்தில் பிரதமர் தனது பயணச் சீட்டை வாங்கினார். பின்னர், நாக்பூர் மெட்ரோவில் ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    • விபத்துக்கு பிறகு, அரை-அதிவேக ரெயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
    • இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.

    குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில்  மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.

    இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்" என்றும் கூறினார்.

    வந்தே பாரத் ரெயிலின் மூன்றாவது சேவையான இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மற்ற ரெயில்களை விட சிறந்த சேவை வசதியைக் கொண்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

    • ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.
    • குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம், தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காந்தி நகரில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது.

    ×