search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trust vote"

    • புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நயாப்சிங் சைனி பதவி ஏற்றார்.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜெ.ஜெ.பி.) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பா.ஜனதா ஆட்சி பொறுப் பேற்றது.

    பா.ஜனதாவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும், ஜெ.ஜெ.பி.யை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் நேற்று பதவி விலகினார்கள். இதையடுத்து புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்த 5 பேரும் கட்டார் அமைச்சரவையில் பதவி வகித்தவர்கள் ஆவார்கள். ஜனநாயக ஜனதா கட்சிக்கு மொத்தம 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 5 பேர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் அரியானா சட்டசபையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது.

    சட்டசைப கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொறடா வின் உத்தரவை மீறி 5 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டசபையில் தற்போது பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அரசுக்கு 6 சுயேட்சை மற்றும் அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளது.

    எனவே ஜெ.ஜெ.பி. ஆதரவு இல்லாவிட்டாலும் பெரும்பான்மக்கு தேவையான பலம் தங்களிடம் இருப்பதாக பா.ஜனதா தெரிவித்தது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அரியானா சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது.

    இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜனதாவுக்கு 8 இடங்களும் உள்ளன. தனிப் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வருகிறார்.

    ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறினார்.

    இந்தநிலையில் டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கெஜ்ரிவால் நேற்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

    விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில் "ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ. கூட பிரிந்து செல்லவில்லை.

    2 உறுப்பினர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் கலந்து கொள்ளவில்லை. 3 உறுப்பினர்கள் சொந்த பணி காரணமாக வெளியே சென்றுவிட்டனர். 2 பேர் ஜெயிலில் உள்ளனர். ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்" என்றார்.

    • அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவு.
    • ஜார்கண்டில் முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.

    தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஜார்க்ண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அதன்படி, ஜார்கண்ட் சட்டபேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதன்மூலம், முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.

    நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் போகப் போக உங்களுக்கு தெரியவரும். தமிழகம் முழுவதும் நிறைய வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஜீரோ வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என்று தகவல்கள் வந்தன.

    300 வாக்குசாவடிகளில் ஜீரோ வாக்குகள் பதிவானதாக எனக்கு தகவல் கிடைத்தது. எங்கள் முகவர்களே அங்கு இருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் 4 பேர் எங்கள் முகவர்கள் இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது இருக்க வேண்டும் அல்லவா? மக்களும், கட்சிக்காரர்களும் ஓட்டு போடாவிட்டாலும் பூத் ஏஜெண்டுகளின் ஓட்டுகள் எங்கே போனது? அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.

    ஜீரோ வாக்குகள் பதிவானதாக இணையதளத்தில் போடப்பட்டிருப்பது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றீர்கள். அது தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

    பதில்:- கழுத்தை நெரிக்கும் வகையில் சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். இந்த ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

    கேள்வி:- அ.ம.மு.க. தமிழகம் முழுக்க அதிக ஒட்டுகள் வாங்கவில்லையே ஏன்?

    பதில்:- அதற்கான காரணம் சிலருக்கு இப்போதே தெரியும். ஒருவாக்குச்சாவடியில் ஜீரோ பதிவாகி இருப்பதால் ஏஜெண்டே ஓட்டு போடவில்லை என்று சொல்கிறீர்களா? இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.

    கேள்வி:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் நம்பவில்லை என்று எடுத்துச் கொள்ளலாமா?

    பதில்: இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதில்:- ஓட்டு போட்டவர்கள் அனைவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

    கேள்வி:- அ.ம.மு.க.வில் உள்ள அ.தி.மு.க. சிலீப்பர் செல்கள் ஆக்டிவேட் ஆகி விட்டார்களா?

    பதில்: எங்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் ஓட்டு போடாத இடங்களில் சிலீப்பர் செல் என்று எடுத்துக்கொள்கிறீர்களா? எங்களது சிலீப்பர் செல்கள் ஓட்டெடுப்பின்போது வெளியே வருவார்கள்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்: யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம்.


    அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. ஒரு ஓட்டில்தான் அவர்கள்.

    கேள்வி: தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    பதில்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×