என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sleeper cells"

    இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது.

    ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் போல் தமிழகத்திலும் நடத்த தீவிரவாதக்குழு திட்டமிடுகிறது. இந்த திட்டத்தின் மூளையாக செயல்படும் நாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் வசிக்கிறார்.

    அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

    இறுதியில் அந்த ஆணும், பெண்ணும் யார்? வீட்டுக்கு வர வேண்டிய அவரது மனைவி என்ன ஆனார்? என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா, கட்டுமஸ்தான உடம்பு, ஆறடி உயரம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்கான தகுதியோடு இருக்கிறார். ஆனால், அந்த தகுதிகளை சரியான முறையில் வெளிக்காட்டாமல், ஓடிக்கொண்டே இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர்செல்கள் யார் ?அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தின் முதல் பாதியில் ஒரே காட்சியை திரும்ப திரும்ப ஓடவிட்டு பார்வையாளர்களை கடுப்பேற்றுகிறார். ஒரே அறையில் முழு படத்தை எடுக்கும் முயற்சியாக கதை மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அதை சற்று தெளிவாகவும், புரியும்படியும் சொல்லியிருந்தால் வித்தியாசமான முயற்சியாக இருந்திருக்கும்.

    இசை

    இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது.  

    ஒளிப்பதிவு

    கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது.

    நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் போகப் போக உங்களுக்கு தெரியவரும். தமிழகம் முழுவதும் நிறைய வாக்குச்சாவடிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஜீரோ வாக்குகள் பதிவாகி இருக்கின்றது என்று தகவல்கள் வந்தன.

    300 வாக்குசாவடிகளில் ஜீரோ வாக்குகள் பதிவானதாக எனக்கு தகவல் கிடைத்தது. எங்கள் முகவர்களே அங்கு இருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த பட்சம் 4 பேர் எங்கள் முகவர்கள் இருப்பார்கள். அந்த 4 ஓட்டுக்களாவது இருக்க வேண்டும் அல்லவா? மக்களும், கட்சிக்காரர்களும் ஓட்டு போடாவிட்டாலும் பூத் ஏஜெண்டுகளின் ஓட்டுகள் எங்கே போனது? அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.

    ஜீரோ வாக்குகள் பதிவானதாக இணையதளத்தில் போடப்பட்டிருப்பது தொடர்பாக வருங்காலத்தில் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றீர்கள். அது தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

    பதில்:- கழுத்தை நெரிக்கும் வகையில் சரியாக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். இந்த ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

    கேள்வி:- அ.ம.மு.க. தமிழகம் முழுக்க அதிக ஒட்டுகள் வாங்கவில்லையே ஏன்?

    பதில்:- அதற்கான காரணம் சிலருக்கு இப்போதே தெரியும். ஒருவாக்குச்சாவடியில் ஜீரோ பதிவாகி இருப்பதால் ஏஜெண்டே ஓட்டு போடவில்லை என்று சொல்கிறீர்களா? இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.

    கேள்வி:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் நம்பவில்லை என்று எடுத்துச் கொள்ளலாமா?

    பதில்: இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    பதில்:- ஓட்டு போட்டவர்கள் அனைவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

    கேள்வி:- அ.ம.மு.க.வில் உள்ள அ.தி.மு.க. சிலீப்பர் செல்கள் ஆக்டிவேட் ஆகி விட்டார்களா?

    பதில்: எங்கள் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் ஓட்டு போடாத இடங்களில் சிலீப்பர் செல் என்று எடுத்துக்கொள்கிறீர்களா? எங்களது சிலீப்பர் செல்கள் ஓட்டெடுப்பின்போது வெளியே வருவார்கள்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?

    பதில்: யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம்.


    அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. ஒரு ஓட்டில்தான் அவர்கள்.

    கேள்வி: தேர்தல் தோல்வி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    பதில்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×