என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகைச்செல்வன்"

    • தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார்.
    • திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.

    2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் மனோஜ் பாண்டியன். எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.

    திமுக-வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட போது என்னை அவர் முழு மன தோடு வரவேற்றார். நான் இன்று மாலை எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்.

    தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைக்காமல் தமிழகத்தின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளை யும், அதனால் ஏற்படும் சோதனைகளையும் எதிர் கொண்டு தமிழக உரிமை களை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்.

    எந்த கொள்கைக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதே கொள்கையில் ஜெயலலிதாவும் பயணித்து வந்தார். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை வழி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உணர்வு களை மதிக்காத தலைவராக உள்ளார். பா.ஜனதா கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர் பிறகு மீண்டும் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை.

    இதுபற்றி தொண்டர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. பா.ஜனதா கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி தி.மு.க.வில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.

    திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.

    அ.தி.மு.க.வை தோற்றுவித்த தலைவரும், அம்மாவும் எந்த சூழ்நிலையிலும் கட்சியை அடகு வைக்கவில்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. வேறு ஒரு இயக்கத்தை நம்பி உள்ளது. எனவே நான் எஞ்சிய வாழ்க்கையை தி.மு.க.வில் பயணிக்க முடிவு செய்து உள்ளேன். இது நான் எடுத்த தீர்க்கமான முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் திமுக-வில் இணைந்தது குறித்து வைகைச்செல்வன் கூறியதாவது:-

    தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார். திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.

    இவ்வாறு வைகைச் செல்வன் தெரிவித்தார்.

    • வைகோ அவருடைய நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக அ.தி.மு.க.வை தேடி வந்தார்.
    • வைகோ தற்போது வயது முதிர்வு காரணத்தினாலும், ஞாபக மறதியின் காரணத்தினாலும் ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.

    போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியிருப்பதாவது:

    வைகோ தொடர்ந்து அவருடைய நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக அ.தி.மு.க.வை தேடி வந்தார். போயஸ் தோட்டத்தை தேடி வந்தார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தேடி வந்தார்.

    தேடி வந்தது வீண்போகவில்லை. அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அவருடைய சின்னமான பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்காக அ.தி.மு.க. கடமையாற்றி அந்த வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்ததை அவர் மறந்து விடக்கூடாது.

    வைகோ தற்போது வயது முதிர்வு காரணத்தினாலும், ஞாபக மறதியின் காரணத்தினாலும் ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.

    ஆகவே, வைகோவை இனிமேல் பொய்கோ என்றுதான் சொல்ல வேண்டும் என்பதை போல இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு வந்தார்.
    • செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கஉள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

    4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்

    புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும் கோவி. செழியனும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.

    இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

    பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" என்றார்.

    • தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார்.
    • எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை கொண்டாடுவது தொடர் பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க. இலக்கிய அணிஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இலக்கிய அணி மாநிலசெயலாளரான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா, இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்கள் இ.சி சேகர், மலர்மன்னன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசாரங்களை மேற்கொண்டு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக வைகைச் செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்வதால் 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமரும். இந்த ஆட்சி எப்பொழுது வீட்டுக்குப் போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆந்திர மாநிலத் தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தோல்வியை தழுவியது போல தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார். அவருக்கு கடும் பின்னடைவு ஏற்படும். அ.தி.மு.க.வில் சின்ன சின்ன சலசலப்புகள் உள்ளன. இதற்கெல்லாம் அஞ்சாத இயக்கம்தான் அ.தி.மு.க. அடிக்க அடிக்க தான் பந்து மேல் எழும்பும். அறுக்க அறுக்கதான் வைரம் மின்னும். அதைப் போன்று அ.தி.மு.க.வும் வரும் காலங்களில் நிச்சயம் வேகம் எடுக்கும்.

    எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. செம்மையுடன் செயல்பட்டு வருகிறது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு இன்னும் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறி இருப்பது தொடர்பாகவும் மீண்டும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றியும் வைகை செல்வனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    ×