என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக பேரணி"

    • தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது.
    • தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் இந்த பைக் பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    எனவே, இந்த பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக தாக்கல் செய்திருந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    தேசியக்கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுத்தது துரதிருஷ்டவசமானது. சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

    தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும்.

    பேரணியில் பங்கேற்பவர்கள் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள், வழித்தடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏந்தி சென்னையில் பாஜகவினர் பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து கருப்பு தின பேரணி நடந்தது.
    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்களை கைதுசெய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மதவாத பிரிவினைவாத மக்கள் விரோத தி.மு.க. அரசைக் கண்டித்து, அமைதியான முறையில் கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்களை கைதுசெய்ததன் மூலம் பயங்கரவாதிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் ரவுடிகளுக்கும் புகலிடம் கொடுக்கும் ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து இந்த கருப்பு தின பேரணி நடைபெற்றது.

    ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்தக் கருப்பு தின பேரணிக்கு காவல்துறை வேண்டுமென்று அனுமதி மறுத்து, அராஜகத்துடன் பேரணியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் தொண்டர்களையும் கைதுசெய்து ஒரு ஜனநாயக படுகொலையை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல்-உம்மா இயக்க நிறுவனரும், 60-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிற பாஷா உயிரிழந்த நிலையில், மக்கள் விரோத தி.மு.க. அரசின் காவல்துறை, பாஷாவை கதாநாயகன் போல், போராளி போலவும் தியாகியாகவும் பெருமைப்படுத்தும் வகையில், ஜனநாயகத்தை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி பெரும் ஊர்வலம் போல பேரணியாக இறுதி ஊர்வலம் செல்ல அனுமதித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படுபாதக செயல் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

    தமிழக அரசு செய்ததை தவறு என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்தும் வகையில் நல்லெண்ணத்துடன், தேசிய உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் தேசபக்தியை வளர்க்கும் வகையில் அமைதியான முறையில் கருப்பு தின பேரணி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

    பயங்கரவாதத்தை உற்சாகப்படுத்தும் வகையில் படுபாதக செயலை செய்தவருக்கு பேரணியாக இறுதி ஊர்வலம் அனுமதித்த தமிழக அரசின் தவறான அணுகுமுறையை, அடையாளப்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக தடுத்து அவர்களை கைதுசெய்தது அராஜகம்.

    தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி நடைபெற்று வரும் இதுபோன்ற அவலங்களை, படுபாதக செயல்களை பா.ஜ.க. மக்கள் துணையுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

    நல்லெண்ணத்திற்காக பேரணி நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பாஜக தொண்டர்களையும் கைது செய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
    • தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது.

    கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.

    மறுநாள் 17-ந் தேதி அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பா.ஜக. நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது, தங்களது கைகளில் பதாகைகள் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியடி சென்றனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை உள்பட 917 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசாைர கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செலயாளர் ஆறுச்சாமி, மண்டல செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலளார் ஜெய்சங்கர்,, பிரபாகரன், செல்வராஜ், சசிக்குமார் உள்பட மீது தடையைமீறி போராட்டத்தில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பேரணிக்கு மகளிரணி மாநில தலைவி உமாபாரதி தலைமை தாங்குகிறார்.
    • அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

    மதுரை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொமை அத்துமீறலை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொமை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க முயலும் தி.மு.க. வைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பா.ஜ.க. மகளிரணியினர் மதுரையில் இருந்து 3-ந் தேதி சென்னை வரை நீதிப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்த பேரணிக்கு மகளிரணி மாநில தலைவி உமாபாரதி தலைமை தாங்குகிறார்.

    மதுரையில் இந்த வாகன பேரணி நாளை (3-ந்தேதி) காலை 10.30 மணிக்கு மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் அருகில் இருந்து தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகை ராதிகா, பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

    இந்த வாகன பேரணி சென்னையில் நிறைவடையும் போது தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று, பின்னர் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரையில் நாளை தொடங்கும் மகளிர் அணி நீதி யாத்திரை பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீஸ் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும் திட்டமிட்டபடி நீதியாத்திரை வாகன பேரணி நடைபெறும் என்றார்.

    ×