என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுப்பாதை"

    • மேம்பாலம் கட்டுவதற்காக ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந் தேதி முதல் ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனால் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய இடத்திற்கு கூடுதலாக10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக பெட்ரோல் செலவும் ஆனது.

    இந்நிலையில் தூரத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழியை கண்டுபிடித்தனர்.

    அதன்படி மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் சாலையில் மறுபுறத்தில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் முடுக்குகாடு ஊர் வழியாக சென்று நடுநிலைப் பள்ளியை கடந்து சென்றால் துறைமுகச் சாலையில் மேம்பாலத்தின் மறுகரைக்கு சென்று விடலாம்.

    இதனால் அவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மிச்சமானது. ஆனால் இந்த முடுக்குகாடு ஊர் வழியாக செல்ல வேண்டும் என்றால் 300 மீட்டர் தூரம் உள்ள உப்பளம் பகுதியை கடந்த செல்ல வேண்டும் இந்த உப்பள பகுதி மணல் சாலையாகும்.

    தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது. அதிக தூரத்தை கடந்து செல்ல விரும்பாதவர்கள் இந்த சகதி குளம் வழியாக துணிந்து சென்று வருகின்றனர். பயணத்தின் போது பலர் சகதியில் விழுந்து எழுந்து செல்கின்றனர். பலர் காயமடைந்து செல்கின்றனர்.

    மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் வருகிற 11-ந் தேதி வரைக்கும் இந்த பயணம் தொடரும் என கூறப்படுகிறது.

    எனவே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அலுவலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுரங்கப்பாதை பணிகள் காரணமாக செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை

    திண்டுக்கல்-திருச்சி பிரிவில் தாமரைப்பாடி-வடமதுரை இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்றும் நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

    எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். சென்னை எழும்பூரில் இருந்து நாளை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரையில் இருந்து இன்று புறப்படுவதாக இருந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்,

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • தண்டவாளம் பராமரிப்பு பணி
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில் :

    தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

    தண்டவாளம் பராம ரிப்பு பணிகள் காரணமாக கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சில தினங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் 21, 24 ஆகிய தேதிகளில் கே.எஸ்.ஆர்.பெங்களூருவில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 1685) வழக்கமாக கிருஷ்ணராஜபுரம், வைட்பீல்டு, மாலூர், பங்கார பெட், குப்பம், திருப்பத்தூர் நிலையங்கள் வழியாக இயக்காமல் எஸ்.எம்.வி.டி.பெங்களூரு, பெங்களூரு கண்டோன் மென்ட், பையா பனாகல்லி, ஓசூர், தர்மபுரி, ஓமல்லூர், சேலம் வழியாக இயக்கப்படும்.

    24-ந்தேதி கன்னி யாகுமரி-கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16525) இதே வழித்தடத்தில் ஏதாவது ஒரு நிலையத்தில் 1 மணி நேரம் 15 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். மேலும் 23-ந்தேதி புறப்படும் கொச்சுவேளி-எஸ்.எம்.வி.டி.பெங்களூரு ரெயில் (எண் 16319), 24-ந்தேதி புறப்படும் எஸ்.எம்.வி.டி.பெங்களூரு-கொச்சுவேளி ரெயிலும் (எண்.16320) முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மதுரை-புனலூர்-மதுரை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (எண் 16729/16730) வருகிற 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் கோவில்பட்டி, சாத்தூர் நிலையங்களில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்த்யோதயா தினசரி அதிவேக ரெயில்கள் (எண் 20691/20692) வருகிற 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் சாத்தூர் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். திரு நெல்வேலி-பாலக்காடு- தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (எண் 16791/16792) 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படை யில் ஏற்றமானூர் நிலை யத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.

    கன்னியாகுமரி-புனலூர் (வண்டி எண் 06640) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதல் ஒரு பெட்டியுடன் இயக்கப்படும். புனலூர்-கன்னியாகுமரி (வண்டி எண் 06639) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கி ழமை) முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதல் ஒரு பெட்டியுடன் இயக்கப்ப டும். நாகர்கோவில்-கன்னியாகுமரி ரெயில் (எண் 06643) இன்று முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியு டனும், கன்னியாகுமரி-நாகர்கோவில் ரெயில் (எண் 06642) நாளை முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியுடன் இயக்கப்படும். நாகர்கோ வில்- திருநெல்வேலி ரெயில் (எண் 06641) நாளை முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியுடன் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு அறிவிப்பு.
    • கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV -கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 12.12.2024 காலை 08.00 மணி முதல் 15.12.2024 காலை 08.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

    * பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர்- வாணியம்பாடி- வேலூர்- ஆற்காடு செய்யாறு - வந்தவாசி வழியாக செல்லவும்.

    * மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யாறு- ஆற்காடு - வேலூர்-வாணியம்பாடி -பர்கூர் வழியாக செல்லவும்.

    * மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் ஆற்காடு செய்யாறு வந்தவாசி வழியாக செல்லவும்.

    * மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களிலிருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யார்- ஆற்காடு- வேலூர் வழியாக செல்லவும்.

    *மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி - தொப்பூர் - சேலம்- வாழப்பாடி -ஆத்தூர் வழியாக செல்லவும்.

    * மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை. திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.

    * விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூர் வாழப்பாடி சேலம் தொப்பூர் -தர்மபுரி வழியாக செல்லவும்.

    * மேற்படி வாகனங்கள் திருக்கோவிலூர். மணலூர்பேட்டை சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அருகே கூடல் நகர் ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.35 முதல் மாலை 5.35 மணி வரை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் 9 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை (16848), நாகர்கோவில் - மும்பை (16352), மதுரை-பிகானிர் ரெயில் (22631), நாகர்கோவில்- கோவை (16321), குருவாயூர்- எழும்பூர் (16128), கோவை-நாகர்கோவில் (16322), ஓகா-ராமேஸ்வரம் (16734), மயிலாடுதுறை-செங்கோட்டை, திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ஆகியவை மாறறுப்பாதையில் இயக்கப்படுகிறது.

    இந்த 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
    • தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.

    ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.

    அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.

    அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.

    தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.

    சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.

    இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-

    பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.

    • லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
    • சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- திருச்சி சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தர் (வயது 47) ஓட்டிச்சென்றார்.

    லாரி தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. மேலும் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகனசுந்தரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அந்த பகுதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்த ப்பட்டதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியாத்தம், விரிஞ்சிபுரம் பாலங்கள் பழுதடைந்ததால் நடவடிக்கை
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் பள்ளி கொண்டா செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால், வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவு பெய்துள்ளதால் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் குடியாத்தம் நகர் பகுதி மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    கனரக மற்றும் மிககனரக சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பழுதடைவதுடன் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளிச்செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துக்கள் நிகழ்கின்றன.

    இவற்றை தடுக்கும் பொருட்டு ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மார்கமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி மார்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் மிககனரக வாகனங்கள் காட்பாடி மற்றும் திருவலம் வழியாக சென்று ஆறு வழிச்சா லைகளை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த மாற்று ஏற்பாட்டினை காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம் உறுதிசெய்யப்படும்.

    அவ்வாறு மீறிச்செல்லும் வாகனங்கள் வந்த வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×