search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sharad yadav"

    • இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர்.
    • 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    இந்திய அரசியலில் பதவிகளை பெரிதாக மதிக்காமல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட தலைவர்களில் சரத்யாதவ் குறிப்பிடத்தக்கவர். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-வது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர். 1989-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் பிரதமருக்கு துணை நின்றவர். சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். டெல்லியில் இருக்கும் நாட்களில் என்னை பலமுறை அழைத்து பேசியிருக்கிறார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை நான் பலமுறை சந்தித்து நலம் விசாரித்தேன். கடுமையான உடல்நலக் குறைவிலிருந்து அவர் நலம் பெற்று மீண்ட போது நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைந்தேன். அவரது திடீர் மறைவை ஏற்றுக்கொள்வதற்கு எனது மனம் மறுக்கிறது.

    சரத்யாதவின் மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பின்னடைவு ஆகும். சரத்யாதவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சமூகநீதி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன்.
    • சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • வாஜ்பாய் அமைச்சரவையில் சரத் யாதவ் 1999-2004-ல் மத்திய மந்திரியாக இருந்தார்.
    • முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சரத் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சரத் யாதவ் ஜி சோசலிசத்தின் தலைவராக இருப்பதுடன் அடக்கமான இயல்புடையவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

    • முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • சரத் யாதவ் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

    சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியி, சரத் யாதவ்ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., மற்றும் மந்திரி என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவரான சரத் யாதவ் இன்று காலமானார்.
    • சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் இன்று இரவு காலமானார்.

    குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் சுபாஷினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்தார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவும் உடனிருந்தார்.
     


    இந்த சந்திப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறுகையில், சந்திரபாபு நாயுடுஜி மற்றும் ஷரத் யாதவ்ஜி ஆகியோருடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்  

    அரசியலமைப்பை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் திரள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota
    தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.

    இது தொடர்பாக நேற்று அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார்.



    அந்த அறிக்கையில் அவர், ‘‘இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அவர்களில் சிலரிடம் நான் பேசி உள்ளேன்’’ என கூறி உள்ளார்.

    மேலும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டு மக்களை காக்கவும் தேவையான முக்கிய விவகாரங்களை விவாதிப்பதற்கு இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என சரத் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சரத் யாதவ் இதற்கு முன் கூட்டிய இத்தகைய கூட்டங்களில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் 8 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சரத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். #SharadYadav #GST
    பாட்னா:

    லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் எனக்கூறி மோடி அறிவித்தார். ஆனால், அவர் கூறியதற்கு எதிராகவே நடந்துவருவதாகவும், இந்த திட்டங்களுக்கு அடிப்படை முன்னேற்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் விவசாயிகளும், இளைஞர்களும் அதிக அளவில் துன்பப்பட்டதாகவும், அதனை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு திட்டங்களுமே சிறு வணிகர்களுக்கு மிகவும் சிரமம் அளித்ததாகவும், அதனால் அவர்களின் வணிகத்தை குறைப்பது அல்லது கைவிடுவதை தவிர வேறு வழியில்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் 7 முதல் 8 கோடி பேர் வரை வேலை இழந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஜி.எஸ்.டியின் ஓராண்டு வெற்றியை மோடி அரசு கொண்டாடிவருவது உண்மைக்கு எதிரானது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். #SharadYadav #GST
    ×