search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SCO"

    • 2017-ல் இந்தியா நிரந்த உறுப்பினர் ஆனது
    • இந்திய ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது உச்சி மாநடாடு ஜூலை 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின்போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.

    இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

    இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

    ரஷியாவில் நடந்து வரும் பயங்கரவாத தடுப்பு போர் பயிற்சி முகாமில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். #SCO2018 #India #Pakistan
    மாஸ்கோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சார்பில் ரஷ்யாவின் செபர்குல் நகரில் தீவிரவாத தடுப்பு போர் பயிற்சி நடந்து வருகிறது. இந்த ராணுவ பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக பங்கேற்றுள்ளது. இந்தியா சார்பில் சுமார் 200 வீரர்களும் மற்ற நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பயிற்சி முடிந்த பின்னர் இரவு ராணுவ வீரர்கள் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். பாலிவுட் பாடல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர்.
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு படையினர் ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் முதன்முறையாக பங்கேற்கின்றனர்.
    புதுடெல்லி :

    பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.  

    பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    மூன்று மாதம் நடைபெற உள்ள இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் போர் பயிற்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த சுமார் 200 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×