search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு: சீன அதிபர் பங்கேற்கிறார்
    X

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு: சீன அதிபர் பங்கேற்கிறார்

    • 2017-ல் இந்தியா நிரந்த உறுப்பினர் ஆனது
    • இந்திய ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது உச்சி மாநடாடு ஜூலை 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின்போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.

    இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

    இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×