என் மலர்
நீங்கள் தேடியது "Palayamkottai central jail"
- திருட்டு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று உச்சிமாகாளி சிறையில் இருந்தார்.
- பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் அகதீஸ்வரம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி(வயது 42). இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று அவர் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி அவர் திடீர் உடல்நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தப்பியோடிய விசாரணை கைதியான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 37).
இவர் தற்போது கரையிருப்பு ரைஸ்மில் தெருவில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடி, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 25-ந்தேதி இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் அவருக்கு வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் ஜெயில் அதிகாரிகள் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விசாரணை கைதியான மணி கண்டனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாநகர பகுதி முழுவதும் சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த
- ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- 2 கைதிகளும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகளுக்கும், விசாரணை கைதிகளுக்கும் சிறைத்துறை சார்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில கைதிகளின் பழக்க வழக்கத்தை பொறுத்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் பீடி கட்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.
கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்க்க வரும்போது அவர்களுக்கு தின்பண்டங்கள், பீடி உள்ளிட்டவை கொண்டு வந்து கொடுத்து வந்த நிலையில், அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டதன் காரணமாக மத்திய சிறைகளில் சிறைத்துறை சார்பில் சிறிய அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு பீடி உள்ளிட்டவை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாளை மத்தியச்சிறையில் சுமார் 1,100 கைதிகள் விசாரணைக்காகவும், தண்டனை பெற்றும் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 கட்டுகள் மட்டும் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என்று சிறை வார்டன்கள் அங்கிருக்கும் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று பீடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வாரத்திற்கு 2 பீடி கட்டுகள் தான் கொடுப்பீர்களா என்று கேட்டு மனம் உடைந்து போன 2 விசாரணை கைதிகள் நேற்று பாளை மத்திய சிறையில் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதுகுறித்து அறிந்த சிறை வார்டன் உடனடியாக அந்த 2 கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையை அறுத்துக்கொண்ட கைதிகள் பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்தையா, கோவில்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும், இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, குமரியில் கடந்த 2022-ம் ஆண்டு வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை மாதம் முதல் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து சென்னை புழல் ஜெயிலில் இருந்த பல அதிகாரிகள், சிறைக்காவலர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். அமைச்சர் சண்முகம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் முக்கிய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. கடந்த 16-ந்தேதி கோவை, சேலம், கடலூர் ஆகிய மத்திய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென்று நெல்லை மாநகர போலீசார் பாளை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 ஆயுதப்படை போலீசார்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த போலீசார்கள் என 73 பேர் அதிரடியாக இன்று காலை 6 மணிக்கு பாளை மத்திய சிறைக்குள் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து பாளை சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறைக்காவலர்கள் அவர்களை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் அழைத்து சென்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 5 பிரிவுகளாக போலீசார் பிரிந்து சென்று இந்த சோதனைகளை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தற்போது பாளை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 649 பேர்களும், விசாரணை கைதிகள் 503 பேர்களும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் 54 பேர்களும், ஒரு தூக்கு தண்டனை கைதியும், முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகளும் என மொத்தம் 1212 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கி இருந்த சிறை வார்டுகள் மற்றும் காலையில் அவர்கள் செல்லும் கழிவறைகள், குளியலறைகள், மைதானங்கள் ஆகியவற்றிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடந்தது. மேலும் கைதிகள் அறையில் அவர்களுக்கு விதிமுறைகளை மீறி ஏதேனும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.
இந்த அதிரடி சோதனையில் போலீசாரிடம் 2 இரும்பு கம்பிகள் மற்றும் கத்தி போன்ற 1½ அங்குலம் அகலத்தில் 1 அடி நீளம் உள்ள 2 அலுமினிய தகடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன்களோ, கஞ்சா போன்ற போதை பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சோதனை இன்று காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் ஏதேனும் தவறான காரியங்கள் நடந்துள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் பாளை மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடப்பதை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் முன்பகுதி மற்றும் வெளிப்புற சுற்று பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. #PalayamkottaiJail #PuzhalJail
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43), விவசாயி. இவருக்கும் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட மோதலில் கணேசன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவகிரி போலீசார் கணேசனை கைது செய்து பாளை மத்திய ஜெயிலில் அடைத்தனர். கணேசனின் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜெயில் அறையில் கணேசனுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நெல்லை கோட்டாட்சி தலைவர் மைதிலி நேரில் சென்று உண்மையில் அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்.






