search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "growth"

    • 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
    • ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.

    கோவை,

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    2013-14 நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்பனை, 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

    "மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

    உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்." என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில்," மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் 'தன்னிறைவிலிருந்து வளம்' என்பதை வலியுறுத்தி 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன" என்றார்.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் திருத்துறை–ப்பூண்டி இணைந்து நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்தங்கராசு தலைமை வகித்தார். சோமநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர், கோ.பழனி, ஊராட்சி மன்றத்தலைவர், இரா.சதீஷ்குமார், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தனபாலன் உதவி தலைமை ஆசிரியர் வரவேற்றார். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன், ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

    உத்தமசோழன், ஆசிரியர் கிழக்கு வாசல் சிறப்புரையாற்றினார். காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ராய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ரோட்டரி சங்கத் தலைவர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். யோகராசன் பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார். ஏற்பாட்டை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் கோவி. வேதகிருஷ்ணன் மற்றும் ப.வரதராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • குறிச்சியில் உள்ள தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சியில் உள்ளது. இங்கு விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு விநியோகஸ்தர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன் பேசும்போது: -

    அடுத்து வரவிருக்கும் அனைத்து விற்பனையின் வளர்ச்சியை ஆரோக்கியமான போட்டியாக எடுத்து கொண்டு அனைத்து விநியோகஸ்தர்களும் பங்கு பெற்று தங்க நாணயம் பெரும்படி வாழ்த்துகிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும், தஞ்சை மற்றும் அரியலூர் சேர்ந்த விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். தமிழ் பால் நிறுவனம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி வரும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    ஜி.டி.பி எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. #GDP
    புதுடெல்லி:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதமாக உள்ளது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருந்தது. அதன்பின் 2017 இறுதி காலாண்டில் 7.7 சதவிகிதமாக உயர்ந்த ஜி.டி.பி தற்போது 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அதிகமான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. #GDP
    ஜி.எஸ்.டி வரி அறிவித்து ஒராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாட்டில் வளர்ச்சியும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். #GSTForNewIndia
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைகிறது.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு எளிமையாக அமைந்துள்ளதாகவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு பலனளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    முன்னதாக, சமீபத்தில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணமாக ஜி.எஸ்.டி அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். #GSTForNewIndia
    தமிழகத்தில் வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? என்பதற்கெல்லாம் யூகமாக பதில் கூற முடியாது. தமிழக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு இதுவரை எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாரோ, அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அழுத்தம் கொடுப்பார்.

    மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் செல்வார். மத்தியஅரசு அமைத்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று கொண்டதா? இல்லையா? என்பதில் பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கையும், செயல்பாடும் அது தான்.

    குறுவை சாகுபடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தான் பொய்த்துள்ளது. அப்படியும் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சியிலும் தமிழக முதல்வர் வளர்ச்சி காண்கின்ற வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்திருந்தார்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. குறுவை சாகுபடிக்கான கால அவகாசம் இருக்கிறது, பருவ மழை தொடங்க இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற இருக்கிறோம்.

    குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. உரிய நிதியை ஒரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அதன்மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×