search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் 9 ஆண்டுகளில் 332 சதவீதம் வளர்ச்சி
    X

    குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் 9 ஆண்டுகளில் 332 சதவீதம் வளர்ச்சி

    • 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
    • ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.

    கோவை,

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    2013-14 நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்பனை, 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

    "மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

    உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்." என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில்," மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் 'தன்னிறைவிலிருந்து வளம்' என்பதை வலியுறுத்தி 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன" என்றார்.

    Next Story
    ×