search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridge collapsed"

    • 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
    • கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 1½ கி. மீ தொலைவில் அமைந்துள்ள புதுக்காலனி பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் வஞ்சி ஓடை உள்ளது.

    போடி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த வஞ்சி ஓடையை தாண்டியதும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லை தொடங்குகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டி ருந்தது.

    நாளடைவில் இப்பகு தியில் விவசாயம் முற்றிலும் அழிந்து இப்பகுதி முழுவதும் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு தற்போது இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.

    தற்போது மழைக்காலம் என்பதால் பொதுப்ப ணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வஞ்சி ஓடைப்ப குதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி வஞ்சி ஓடை கரைகளை பலப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

    ஏற்கனவே சேதமடைந்த பாலத்தின் அருகே கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.

    இதனால் ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்க பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தநிலையில் இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்களால் உருவாக்கப்பட்ட பாலம் என்பதால் போடி நகராட்சி நிர்வாகமும் அணைக்கரை ப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைத்து தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே ஜெயம் நகர் விரிவாக்க பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது.
    • மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டி உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று மாலை திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 

    கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்தது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இப்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது. மேலும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    • ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
    • காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் கூறினார்.

    குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தை அடுத்து, மேற்கு வங்காளத்தில் உள்ள 2,109 பாலங்களில் ஆய்வு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

    மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், சிலிகுரியில் உள்ள முடிசூட்டுப் பாலத்தையும், காங்சபதியின் குறுக்கே உள்ள பிரேந்திர சாஸ்மல் சேதுவையும் சீக்கிரம் சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்த்ராகாச்சி பாலத்தை சீரமைக்க தேவையான பணிகள் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், காங்சபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது இரண்டு புதிய பாலங்கள் கட்டப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் ​​"குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பிறகு, மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு எடுத்துக் கொள்ள முடியாது." என்றார்.

    • தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
    • இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது.

    இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது.

    அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது. அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர்.

    அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்தில் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர்.

    ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது.
    • அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும்.

    ஒடிசா மாநிலம் கலஹாண்டி மாவட்டம் பவானிபட்னாவில் உள்ள பாகீரதி பூங்கே அருகே நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

    இதில், அந்த வழியாக சென்ற இரண்ட கார்கள் பள்ளத்தில் விழுந்து சிக்கின. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காருக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர், கார்களை மீட்கும் பணியில் ஈடுட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பவானிபட்னாவை அடைய துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபுர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம், 1925-ம் ஆண்டு காலாஹண்டி சமஸ்தானத்தின் பொறியியல் துறையால் கட்டப்பட்டது.

    இந்த விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது என்றும் பாலம் இடிந்து விமுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாள்ர் அஜித்பாபு தெரிவித்தார்.

    மேலும், அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும் என்றும் கூறினார்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KolkataBridgeCollapse
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது பாலம் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ##KolkataBridgeCollapse
    ×